மனநோயாளிகளைப் பராமரிப்போருக்கு நிதி திரட்டும் முயற்சி

மனநோயாளிகளைப் பராமரிப்போருக்கு நிதி திரட்டும் முயற்சி

1 mins read
0e5b131e-cd6c-4144-9b48-d87b1eb353c0
-

மன­நோ­யா­ளி­க­ளைப் பரா­ம­ரிப்­ப­­வர்­க­ளுக்­காக நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஈடு­பட 1,000க்கும் மேற்­பட்­டோர் பதிவு செய்­த­னர்.

$145,000 நிதி திரட்ட இவர்­கள் 100 கிலோ­மீட்­டர் தூர நடை­ப்ப­யிற்சி­ யில் நேற்று காலை ஈடு­பட்­ட­னர்.

இந்த நடை­ப்ப­யிற்சி நேற்று காலை 7 மணிக்கு சிங்­கப்­பூர் விளை­யாட்டு மையத்­தின் 100பிளஸ் புரோ­மி­னாட்­டில் தொடங்­கி­யது. நிதி திரட்ட நடத்­தப்­படும் நடை­

ப­யிற்­சி­கள் இன்­றும் நடை­பெ­றும்.

பீஷான், ஈசூன், பொங்­கோல், தெம்­ப­னிஸ் உட்­பட சிங்­கப்­பூ­ரின் மத்­திய, வடக்கு, கிழக்­குப் பகு­தி­களில் இந்த 20 கிலோ­மீட்­டர், 50 கிலோ­மீட்­டர், 100 கிலோ­மீட்­டர் நடை­ப­யிற்­சிப் பாதை­கள் அமைந்­துள்­ளன. பதி­வுக் கட்­ட­ணங்­கள், ரொக்க நன்­கொ­டை­கள் மூலம் கிடைக்­கும் தொகை பரா­ம­ரிப்­பா­ளர்­கள் கூட்­டணி அமைப்­பி­டம் வழங்­கப்­படும்.

இந்த அமைப்பு மன­நோ­யா­ளி­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்கு உதவி செய்­யும் லாப நோக்­க­மற்ற அமைப்­பா­கும்.