கிளமெண்டி வனப்பகுதிக்குள் அமையவிருக்கும் இரண்டு கிலோ மீட்டர் நீள இயற்கை பாதையின் அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகள் உணர்வுபூர்வ ஓடை வழியாக இடம்பெறுகிறது.
அந்தப்பாதை நீழ்வாழ் உயிரினங்கள், உலகில் அருகி வரும் ஸ்ட்ரா-ஹெட்டட் புல்புல் குருவி போன்றவற்றுக்கு இருப்பிடமாக இருந்து வருகிறது.
பொழுதுபோக்குப் பாதையாக இருந்தாலும் அங்குள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்காக பொதுமக்களையும் சுற்றுச்சூழல் ஆலோசகர்களையும் தேசிய பூங்காக் கழகம் உதவி கேட்டுள்ளது.
இவ்வாரம் மாணவ தொண்டூழியர்கள் உட்பட பொதுமக்கள் இதன் தொடர்பில் ஆய்வுகளை மேற் கொள்ளவிருக்கின்றனர்.
ஆய்வில் கிளமெண்டி வனப் பகுதி ஓடையோரம் உள்ள தாவ ரங்கள், உயிரினங்கள் பற்றிய விவரங்கள் சேகரித்து பதிவு செய்யப்படும்.
'குடிமக்கள் அறிவியல் அறிஞர்கள்' திரட்டும் இத்தகைய தரவுகளைக் கொண்டு ஓடையோரமாக தாவரம், நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்ப சூழல் மேம்படுத்தப்படும் என்று தேசிய பூங்காக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பல்லுயிர் ஆய்வுகள் பின்னர் சுற்றுச் சூழல் ஆலோசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அவர்கள், நீரோடைக்கு அருகில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள் தாவர, விலங்கு களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மதிப்பிடுவார்கள்.
இதையடுத்து தாக்கத்தை குறைக்கும் உத்திகளை அவர்கள் வகுப்பார்கள்.
இரண்டாம் கட்ட மேம்பாட்டுப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்தாக வேண்டும் என்று தேசிய பூங்காக் கழகம் தெரிவித்தது. புக்கிட் தீமாவின் முதல் திருப்பிவிடப்பட்ட கால்வாய் வழியாக ஓடையையும் உள்ளடக்கிய 800 மீட்டர் நீளமுள்ள பகுதி மதிப்பீடுகளில் அடங்கும்.
கடந்த ஆண்டு கிளமெண்டி வனப்பகுதி வழியாக இரண்டு இயற்கைப் பாதைகள் உருவாக்கப்படும் என்று தேசிய பூங்காக் கழகம் அறிவித்திருந்தது.
அதில் ஒன்று, இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள கிளமெண்டி இயற்கை பாதையாகும்.
இதற்கிடையே அடுத்த ஆண்டி லிருந்து மேம்பாட்டுப் பணிகளின் போது தாவரம், வனவிலங்குகளை பாதிக்கும் அம்சங்களை மதிப்பிடும் சுற்றுச்சூழல் ஆலோசகர் தொடர் பான விவகாரங்களை மேம்பாட் டாளர்களுக்குப் பதிலாக தேசிய பூங்காக் கழகமே கையாளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடுகளை ஒருங்கிணைக்க உதவும்.

