எல்லாவிதமான வர்த்தகங்களிலும் கைதேர்ந்தவரான சிங்கப்பூரின் முன்னாள் தூதர் கோபிநாத் பிள்ளையின் நினைவுகள் அடங்கிய நூல் நேற்று வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் ஒரு நாடாக முன் னேறிய காலத்தில் அவரது பங்கை யும் போராட்டங்களையும் சாதனை களையும் நூல் விளக்குகிறது.
நூலுக்கு 'More Than the Eye Can See' என்று தலைப்பு இடப் பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் நேற்று தேசிய பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக கலாசார நிலையத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் அந்த நூலை வெளியிட்டு கோபிநாத் பிள்ளையை பெருமைப்படுத்தினார். நிகழ்வில் சிற்றுரையாற்றிய முன்னாள் பிரதமரான கோ சோக் டோங், சிங்கப்பூருக்கு குறிப்பிடத்தக்க பங்கையாற்றியுள்ள திரு பிள்ளையை முன்னோடித் தலைமுறையின் சிறந்த உறுப்பினர் என்று பாராட்டினார்.
"திரு பிள்ளையின் வாழ்க்கை சிங்கப்பூர் வரலாற்றின் முக்கிய அங்கமாகும். கற்றல், உறுதி, சாதனை, பங்களிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க பயணம்," என்று திரு கோ வருணித்தார். என்யுஎஸ் தெற்காசிய ஆய்வுக் கழகம் (ISAS) நூல் வெளியிட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆய்வுக் கழகத்தை நிறுவிய முதல் தலைவர் திரு பிள்ளை. கடந்த ஆண்டு வரை 17 ஆண்டுகள் அவர் இப்பதவியில் நீடித்தார்.
தற்போது தெற்காசிய ஆய்வுக்கு முன்னோடியாக இருக்கும் சிந்தனைக் குழுவுக்கு அவர் ஆலோச கராக உள்ளார். இந்திய மரபுடைமை நிலைய ஆலோசனை சபையின் முன்னாள் தலைவருமான 84 வயது கோபிநாத் பிள்ளைக்கு, சிங்கப்பூரின் தலைசிறந்த தேசிய விருதுகளில் ஒன்றான 'மதிப்பிற்குரிய சேவை விருது' இவ்வாண்டு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

