வெளிநாட்டு ஊழியருக்காக விளையாட்டு காலணிகள் நூற்றுக்கணக்கில் நன்கொடை

வெளிநாட்டு ஊழியருக்காக விளையாட்டு காலணிகள் நூற்றுக்கணக்கில் நன்கொடை

1 mins read
d80ddcf3-7b6b-4c39-ac1f-88e215a59cb6
-

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு உதவு­வ­தற்­காக 'இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ்' என்ற அமைப்பு செயல்­ப­டு­கிறது. அந்த அமைப்பு, வெளி­நாட்டு ஊழி­ய­ருக்­காக விளை­யாட்டு தினத்தை நடத்தியது.

அந்த விளை­யாட்டு நிகழ்ச்­சி­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­போது, அவர்­களிடம் விளை­யாட்­டுக் கால­ணி­கள் இல்லை என்­பது இந்த அமைப்­புக்­குத் தெரி­ய­வந்­தது.

உட­ன­டி­யாக இந்த லாப நோக்க மற்ற அமைப்பு, ஆகஸ்ட 17ஆம் தேதி ஃபேஸ்புக்­கில் கோரிக்கை ஒன்றை வெளி­யிட்டு, வெளி­நாட்டு ஊழி­யருக்கு விளை­யாட்­டுக் கால ணி­களை அன்­ப­ளிப்­பாக கொடுக்­கும்­படி கேட்­டுக்கொண்­டது.

அவற்றை சிங்­கப்­பூர் முழு­வதிலும் வசிக்­கும் இந்த அமைப்­பின் தொண்­டூ­ழி­யர்­கள் வீடு­களில் கொடுக்­க­லாம் என்­றும் அது அறி­வித்­தது. ஐந்தே நாட்­களில் நூற்­றுக்கணக்­கான ஜோடி கால­ணி­கள் திரண்­டன. அவற்­றில் புதி­ய­வை,­ பயன்­படுத்­தப்­பட்­ட­வை­ இருந்­தன.

கால­ணி­கள் மலை­போல் குவிந்து­விட்­டன என்று இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ் அமைப்­பைத் தோற்­று­வித்த தீபா சுவா­மி­நா­தன், 50, கூறி­னார். ஏறக்­கு­றைய 50 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அவற்­றைப் பெற்­றுக்­கொண்­ட­னர்.

ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த விளை­யாட்டு தினத்­தன்று 20 பேருக்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அந்­தக் கால­ணி­களை அணிந்துகொண்டு விளை­யா­டி­னர்.

எஞ்சி இருக்­கும் கால­ணி­கள், அப்­பர் பாய­ லே­பார் ரோட்­டில் செப்­டம்­பர் 3ஆம் தேதி இந்த அமைப்பு தொடங்க இருக்­கும் ஒரு புதிய இடத்­தில் (InspIRRe) வைக்­கப்­படும். அவற்றை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அந்த இடத்­தில் கைப்பை, மெத்தை, காற்­றா­டி­கள், சாதம் சமைக்­கும் சாத­னங்­கள் போன்ற பொருள்க­ளை நன்­கொடையாகத் தரலாம்.