முன்னாள் தஞ்சோங் பகார் ரயில் நிலையம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் அதிக காலம் பெரும்பாலும் காலி இடமாகவே இருந்து வருகிறது.
அதற்குப் புதிய பொலிவு கிடைக்க இருக்கிறது. அந்த தேசிய நினைவுச்சின்னத்தின் பழமை கெடாமல் அதைப் புதுப்பிக்கும் பணிகள் 2024ஆம் ஆண்டில் தொடங்கி 2026ல் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்போது அது குடிமை சமூகக் கட்டடமாக இருக்கும். உணவு, பான விருப்ப உரிமை களுடன் கூடிய வர்த்தகக் கட்டடமாக அல்லது ஹோட்டலாக இருக்கும். சிங்கப்பூர் நில ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மூலம் இந்த விவ ரங்கள் தெரியவருகின்றன.