தனியார் வீட்டை வாங்கிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு உரிமையாளர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் பாதியில் குறைந்து இருக்கிறது.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகளும் அதிக அடமான விகிதமுமே இதற்குக் காரணம்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் வீவக வீடுகளின் மறுவிற்பனை விலை 5.3% அதிகரித்தது.
ஆனால் தனியார் வீடுகளின் விலை 4.2%தான் கூடியது. என்றாலும்கூட தனியார் வீட்டுக்குத் தாவிய வீவகவினர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
வீவக முகவரியுடன் கூடியவர்கள், 2022 முதல் ஆறு மாதங்களில் வாங்கிய புதிய மற்றும் மறுவிற்பனை மாடி வீடுகள் மொத்தம் 3,649 என்பது தெரியவந்தது.

