முன்னாள் காதலன் மீது வெந்நீர் ஊற்றியவருக்குச் சிறை

முன்னாள் காதலன் மீது வெந்நீர் ஊற்றியவருக்குச் சிறை

1 mins read
4a503acf-20c1-43a7-a7fc-c78ee4925879
ஷசிலா அக்பர் பாட்சாவுக்கு மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நீரி­ழி­வு­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள தமது முன்­னாள் காத­லன் மீது வெந்­நீரை ஊற்­றிக் காயப்­ப­டுத்­திய பெண்­ணுக்கு மூன்று வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆட­வ­ருக்கு நீரி­ழி­வு­நோய் இருந்­த­தால் அவர் மீது வெந்­நீர் ஊற்­றப்­பட்­டதை அடுத்து மிக மோச­மான காயங்­களும் தழும்­பு­களும் ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும்.

ஆனால் அந்த ஆட­வ­ரைப் பரி­சோ­தித்த மருத்­து­வர் அவ­ருக்கு இருந்த நீரி­ழி­வு­நோய் காயங்­களை மோச­மாக்­க­வில்லை என்று தெரி­வித்­தார்.

முன்­னாள் காத­ல­னைத் தாக்கி­ய­தை 25 வயது ஷசிலா அக்­பர் பாட்சா நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

கடந்­த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி­யன்று மார்­சி­லிங் வட்­டாரத்தில் உள்ள தமது நண்­ப­ரின் வீட்­டுக்கு ஷசிலா சென்­ற­போது தற்­செ­ய­லாக அந்த 31 வயது ஆட­வரை அந்த வீட்­டுக்கு வெளியே பார்த்­தார்.

நண்­ப­ரின் வீட்­டுக்கு அரு­கில் உள்ள படிக்­கட்­டு­களில் இரு­வ­ருக்­கும் இடையே கடு­மை­யான வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. ஆட­வ­ரின் இடது கன்னத்­தில் ஷசிலா அறைந்­தார்.

அதை­ய­டுத்து, இரு­வ­ரும் நண்­ப­ரின் வீட்­டுக்­குள் நுழைந்­த­னர்.

ஆனால் வாக்­கு­வா­தம் நின்­ற­பா­டில்லை.

ஷசி­லா­வுக்கு அவ­ரது குழந்­தை­யைப் பார்த்­துக்­கொள்­ளத் தெரி­ய­வில்லை என்று அந்த ஆட­வர் கூறி­ய­தைக் கேட்டு சமை­ய­ல­றைக்­குச் சென்று பிளாஸ்­டிக் குவ­ளை­யில் வெந்­நீரை எடுத்­துக்­கொண்டு வந்து அவர் மீது ஊற்­றி­னார் ஷசிலா.

மறு­நாள் மருந்­த­கத்­துக்­குச் செல்­வ­தற்கு முன்பு அந்த ஆட­வர் காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தார். அவ­ருக்கு மூன்று நாள்­கள்

மருத்­து­வ­ விடுப்பு வழங்­கப்­பட்­டது.