பணயத் தீநிரலால் உள்ளூரில் பாதிப்பு

பணயத் தீநிரலால் உள்ளூரில் பாதிப்பு

1 mins read
31f4cbe1-084f-4117-8c1e-d6e91db4635a
-

உலக நாடு­களில் உள்ள பல நிறு­வ­னங்­க­ளைப் போலவே பண­யத் தீநி­ர­லால் (Ransomware) கடந்த ஆண்டு 137 சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் பாதிப்­ப­டைந்­தன. பண­யத் தீநி­ரல் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் திருடி தக­வல் மறைப்பு செய்து அவற்­றைப் பூட்டி விடும்.

தங்­கள் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் திரும்ப பெற்­றுக்­கொள்ள அவற்­றின் உரி­மை­யா­ளர்­கள் பண­யத் தொகை­யைச் செலுத்த வேண்­டும்.

சில சம­யங்­களில் தனிப்­பட்ட விவ­ரங்­களை வெளி­யி­டப்­போ­வ­தாக மோச­டிக்­கா­ரர்­கள் மிரட்­டு­வர். அவ்­வாறு ஏற்­ப­டா­தி­ருக்க அவர்­கள் பண­யத் தொகை கேட்­பர்.

கடந்த ஆண்டு பண­யத் தீநி­ர­லால் பாதிப்­ப­டைந்து பண­யத் தொகை­யைச் செலுத்தி அவற்­றின் தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்ட உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தாக சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்பு கூறி­யது.

2020ஆம் ஆண்­டில் பண­யத் தீநி­ர­லால் 89 உள்­ளூர் நிறு­வ­னங்­கள் பாதிப்­ப­டைந்­தன.

பண­யத் தீநி­ர­லால் பாதிக்­கப்­பட்ட உள்­ளூர் நிறு­வ­னங்­களில் பெரும்­பா­லா­னவை தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் உற்­பத்­தித் துறை­யைச் சேர்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் எனக் கண்­டு­பி­டிக்­கப்

பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­க­ளின் கட்­டுக்­குள் வந்த உள்­ளூர் இணை­யக் கட்­ட­மைப்­பு­

க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு மும்­ம­டங்கு ஏற்­றம் கண்­டது.

கடந்த ஆண்டு 3,300 இணையக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன.