சிட்டிபேங்க் மோசடி வழக்கு: போலி ஆவணம் சமர்ப்பித்த ஒற்றைப் பெற்றோருக்குச் சிறை

சிட்டிபேங்க் மோசடி வழக்கு: போலி ஆவணம் சமர்ப்பித்த ஒற்றைப் பெற்றோருக்குச் சிறை

2 mins read
2ea4a0c4-eae4-4d9d-a7cf-64f063554d21
-

சிட்­டி­பேங்க் மோசடி வழக்­கில் ஒற்­றைப் பெற்­றோர் ஒரு­வ­ருக்­குச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பெண் இவ்­வ­ழக்­கில் தண்­டணை விதிக்­கப்­பட்ட 13வது நபர்.

கடன்­க­ளைப் பெற போலி ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்த குற்­றத்­தில் 29 வயது கிரண் கவு­ருக்­கும் (படம்) பங்கு இருந்­த­தாக நிரூ­பிக்­கப்­பட்­டது. மோச­டிக் குற்­றத்­தில் ஈடு­பட்­ட­தற்­காக அவ­ருக்கு ஆறு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2019ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதத்­துக்­கும் அக்­டோ­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் கடன் கேட்டு 20 விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தா­க­வும் அவற்­றுக்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­ட­தா­க­வும் சிட்டி குழு­மத்­தின் பய­னீட்­டா­ளர் பிரிவு கூறி­யது.

ஆனால் அந்த விண்­ணப்­பங்­கள் தொடர்­பா­கச் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­கள் போலி­யா­னவை என்று பிறகு தெரி­ய­வந்­த­தாக அது கூறி­யது.

கவு­ருக்கு வேலை இல்லை என்றும் நிதி பிரச்­சி­னையை எதிர்­நோக்கியதாகவும் அர­சாங்­க வழக்­

க­றி­ஞர் தெரி­வித்­தார். இந்­நி­லை­யில், இணை­யத்­தில் வலம் வந்த விளம்­ப­ரத்­தைப் பார்த்து சார்ல்ஸ் என்­ப­வ­ரு­டன் அவர் வாட்ஸ்­அப் மூலம் தொடர்­பு­கொண்­டார். சார்ல்­சின் உண்­மை­யான அடை­யாளம் குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

சிட்­டி­பேங்­கி­லி­ருந்து கடன் வாங்­கித் தரு­வ­தாக கவு­ரி­டம் சார்ல்ஸ் தெரி­வித்­த­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கவு­ரி­ட­மி­ருந்து அவ­ரது சிங்­பாஸ் மறைச்­சொல்லை சார்ல்ஸ் பெற்­றுக்­கொண்­டார். அதன் பிறகு ஆர்ச்­சர்ட் சாலை­யில் உள்ள மெக்­டோ­னல்ட் ஹவு­ஸில் இருக்­கும் சிட்­டி­பேங்க் கிளைக்கு வெளியே அடை­யா­ளம் தெரி­யாத ஆட­வர் ஒரு­வ­ரைச் சந்­திக்­கு­மாறு கவு­ரி­டம் சார்ல்ஸ் தெரி­வித்­தார்.

அந்த ஆட­வ­ரி­ட­மி­ருந்து கவுர் போலி ஆவ­ணங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­டார். அதில் அவர் இன்­னொரு வங்­கி­யில் பணி­பு­ரி­வ­தா­க­வும் 2018ஆம் ஆண்டு ஜூலை மற்­றும் ஆகஸ்ட் மாதங்­களில் மாதச் சம்­ப­ள­மாக $6,700 ஈட்­டி­ய­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

சிட்­டி­பேங்க்­கில் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணி­பு­ரிந்த 29 வயது கெர்க் சுவா மின் சுவான் என்­ப­வ­ரைச் சென்று பார்க்­கும்­படி கவு­ரி­டம் சார்ல்ஸ் கூறி­னார்.

கவுரின் கடன் விண்ணப்பம் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்டு பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கவு­ருக்கு மொத்­தம் $13,490 கிடைத்­தது. ஆனால் அதில் $4,000ஐ மட்­டும் வைத்­துக்­கொண்டு எஞ்­சிய தொகையை சார்ல்ஸ் கூறி­யது போல தம்­மி­டம் போலி ஆவ­ணத்­தைக் கொடுத்த ஆட­வ­ரி­டம் தந்­த­தாக கவுர் தெரி­வித்­தார்.

அதே ஆண்டு அக்­டோ­பர் 2ஆம் தேதி­யன்று போலி ஆவ­ணங்­கள் குறித்து சிட்­டி­பேங்க் பிர­தி­நிதி ஒரு­வர் காவல்­து­றை­யில் புகார் செய்­தார். போலி ஆவ­ணங்­களைச் சமர்ப்­பித்­த­வர்­களில் கவு­ரும் அடை­யா­ளம் காணப்­பட்­டார்.

இந்த வழக்­கு­டன் தொடர்­பு­டைய மற்ற 12 பேருக்கு ஏற்­கெ­னவே தண்­டனை விதிக்­கப்­பட்­டு ­விட்­டது. சுவா­வின் வழக்கு நிலு­வை­யில் உள்­ளது.

சிட்­டி­பேங்க் வங்­கி­யி­டம் கவுர் $4,000 திருப்­பிக் கொடுத்­து­விட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. அவர் $10,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். சிறைத் தண்­ட­னை­யைத் தொடங்க அடுத்த மாதம் 26ஆம் தேதி­யன்று அரசு நீதி­மன்­றத்­தில் அவர் சர­ண­டைய வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.