அண்மையில் புளோக் 236 ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் உள்ள வீடு தீக்கு இரையானது. அந்த வீட்டில் இருந்த ஒருவர் மாண்டார். மற்றொருவர் உயிர் பிழைத்தார். தீச்சம்
பவம் இம்மாதம் 16ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்தது.
அந்த வீட்டுக்கு வெளியே தேவையற்ற பல பொருள்கள் குவிக்கப்படுவதாக கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பல்வேறு அமைப்புகளுக்கு அண்டைவீட்டாரான 56 வயது திரு குமார் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பினார்.
ஆனால் தகுந்த நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றார் அவர்.
இந்நிலையில், அவர் அஞ்சியது போல அந்த வீடு தீப்பற்றி எரிந்தது.
திரு குமார் புகார் செய்த பிறகு சம்பந்தப்பட்டவருடன் இணைந்து செயல்பட வீவக, நகர மன்றம் முயற்சிகள் எடுத்ததாக யூஹுவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

