சிங்கப்பூர், இந்தோனீசிய மின்னற்படையினர் கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர், இந்தோனீசிய மின்னற்படையினர் கூட்டுப் பயிற்சி

1 mins read
de03e464-ad9e-4682-b992-5eb8ec22af93
இம்மாதம் நடைபெற்ற 'சந்திரபுரா' கூட்டு ராணுவப் பயிற்சியில் சிங்கப்பூர், இந்தோனீசிய மின்னற்படை வீரர்கள் பங்கெடுத்தனர். படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சியா ஆகிய இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த 100க்கும் அதி­க­மான மின்­னற்­படை வீரர்­கள் பங்­கெ­டுத்த கூட்டு ராணு­வப் பயிற்சி வெற்­றி­க­ர­மாக நிறை­வ­டைந்­துள்­ளது. 'சந்­தி­ர­புரா' எனும் இந்த இரு­த­ரப்புக் கூட்­டுப் பயிற்சி ஆண்டு­தோ­றும் நடை­பெற்று வரு­கிறது.

28வது ஆண்­டாக நடை­பெற்ற இப்­ப­யிற்சி இம்­மா­தம் 22ஆம் தேதி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வரை இடம்பெற்றது.

பயிற்­சி­யில் தடை­ தாண்டு­வது, நகர்ப்­பு­றங்­களில் சண்­டை­யி­டு­வது போன்­ற­வற்­றில் இரு­நாட்­டுத் துரப்பு­களும் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்­டன. மின்­னற்­படை வீரர்­களுக்­கான உத்­தி­கள் உள்­ளிட்­ட­வற்­றின் தொடர்­பில் இரு­நாட்டு வீரர்­கள் தங்­க­ளின் திறன்களைப் பகிர்ந்­தும் கொண்­ட­னர்.

"இந்­ந­ட­வ­டிக்­கை­கள் தன்­னம்பிக்­கையை வளர்க்க உத­வு­வதோடு நட்பை ஆழ­மாக்­க­வும் இரு­த­ரப்பு வீரர்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வை வலுப்­ப­டுத்­த­வும் கைகொடுக்கின்றன," என்று தற்­காப்பு அமைச்சு கூறி­யது. மேலும், சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடையே நீண்­ட­கா­ல­மாக இருந்­து­வ­ரும் தற்­காப்பு உறவை 'சந்­தி­ர­புரா' எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வும் தற்­காப்பு அமைச்சு குறிப்­பிட்டது.

கூட்­டுப் பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது மட்­டு­மின்றி இரு­நாட்டு வீரர்­களும் பங்கேற்கும் பாடத் திட்­டங்­களை நடத்­து­வது போன்ற நட­வடிக்­கை­க­ளை­யும் சிங்­கப்­பூர், இந்­தோ­னீ­சிய ராணு­வப் படை­கள் மேற்­கொள்­வ­தாக அமைச்சு கூறியது.