ஸ்கூலிங்: வசந்த காலமும் கசந்த காலமும்

ஸ்கூலிங்: வசந்த காலமும் கசந்த காலமும்

2 mins read
656dced1-d62a-48f8-b913-8a11f1a7a9f6
ஜோசஃப் ஸ்கூ­லிங், கஞ்சா புழங்கியதாக ஒப்புக்கொண்டதை அடுத்து நீச்சலில் கலந்துகொள்ள இவருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு இவர் ஆளாக நேரிடக்கூடிய சூழல் உருவாகி உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரின் நீச்­சலில் நம்­பிக்கை நட்சத்திரம் என்று போற்றிப் புகழப்­படும் ஜோசஃப் ஸ்கூ­லிங், கஞ்சா புழங்கி­ய­தாக ஒப்­புக்­கொண்டுள்ளார்.

தனது செய்­கைக்­காக ஸ்கூலிங் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டு உள்­ளார். திடீ­ரென்று ஏற்­பட்ட மன உந்­து­தல் கார­ண­மாக முன்பின் யோசிக்­கா­மல் அந்­தக் காரி­யத்­தைத் தான் செய்­து­விட்­ட­தாக அவர் மிகவும் வருத்­தம் தெரி­வித்துள்ளார்.

எப்­ப­டி­யும் மீண்டு உச்­சத்­துக்கு வருவேன் என்று அவர் நம்­பிக்­கை­ யுடன் உறுதி தெரி­வித்துள்ளார்.

இந்த சங்கடமான காலத்தில் அவருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அவருக்கு தொடர்ந்து வலுவான ஆதரவு வழங்கப்போவதாக ஜெர்மனியின் ஆடம்பர நவநாகரீக பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான 'ஹியூகோ பாஸ்' தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ டிஜெ­னி­ரோ­வில் சிங்­கப்­பூ­ரின் முதலா­வது ஒலிம்­பிக் தங்­கப் பதக்கத்­தைப் பெற்று அவர் வரலாறு படைத்­தார். அந்­தப் பதக்­கத்தை அவர் சாதனை நேரத்­து­டன் வென்­றார். ஒலிம்­பிக் போட்­டி­களில் கலந்­து­கொண்டு 23 முறை தங்­கப் பதக்கம் பெற்ற மைக்­கல் ஃபெல்ப்ஸ், ஸ்கூ­லிங்கை பாராட்­டி­னார்.

'நீச்­சல் கலை­யு­டன் பிறந்­த­வர், நீந்­து­வ­தற்கே பிறந்­த­வர், நம்­பிக்கைமிக்­க­வர், கட்­டொ­ழுங்­கு­டன் கூடி­ய­வர், கருணை உள்­ள­வர்," என்­றெல்­லாம் அவர் போற்­றி ­புகழப்­பட்­டார்.

ஸ்கூ­லிங், 27, சிங்­கப்­பூ­ரின் கதா­நா­ய­க­னாக, தங்க மக­னாக, நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக ஜொலித்­தார். வியட்­னா­மில் இந்த ஆண்டு மே மாதம் நடந்த தென்­கி­ழக்கு ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் கலந்­து­கொள்ள தேசிய சேவை­யில் இருந்து விடுப்பு எடுத்­துக்­கொண்டு அவர் அங்கு சென்­றார். தான் அங்கு கஞ்சா புழங்­கி­ய­தாக அவர் ஒப்­புக்­கொண்­டார்.

இதனையடுத்து ஸ்கூ­லிங் நிலை தலை­கீ­ழாக மாறிவிட்டது. பல விசா­ர­ணை­களுக்­கும் ஒழுங்­கு­முறை நடவடிக்கைகளுக்­கும் அவர் உட்ப­ட­வேண்டிய கட்­டா­யம் ஏற்­பட்டுள்ளது.

கட்­டொ­ழுங்கு இல்­லா­த­வர், திடீர் உந்­து­த­லுக்கு ஆட்­ப­டக்­கூடிய வர், ஒரு­மித்த கவ­னம் இல்லா­த­வர் என்று பேசும் அள­வுக்கு இப்­போது அவ­ரின் நிலை ஆகிவிட்டது.

அவர், மறு­ப­டி­யும் எழுந்து மீண்டும் உச்­சத்­தைப் பிடிக்க ஏதேனும் ஒரு வழி­யா­வது இருக்­காதா என்ற எண்ணம் ஏற்­பட்­டு உள்ளது.