பாகிஸ்தானில் வெள்ளம்: சிங்கப்பூர் US$50,000 உதவி

பாகிஸ்தானில் வெள்ளம்: சிங்கப்பூர் US$50,000 உதவி

1 mins read
7e6b670d-077c-47cd-82aa-7106db056ecd
பாகிஸ்தானில் பல மாதங்களாக மழை பெய்வதால் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. 1,100க்கும் மேற்பட்ட மக்கள் மாண்டுவிட்டனர். படம்: இபிஏ -

பாகிஸ்­தா­னில் பல பகு­தி­களில் பெரும் வெள்­ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அந்த நாட்டுக்கு உத­வு­வ­தற்­காக சிங்கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் பொது நிதித் திரட்டு முயற்­சி­யைத் தொடங்கி இருக்­கிறது.

அந்த முயற்­சிக்கு ஆத­ர­வாக சிங்­கப்­பூர் அர­சாங்­கம் US$50,000 ஆதார நிதி­யாக வழங்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாகிஸ்­தா­னில் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்தினருக்கு உதவ உடனடி யாக தேவைப்­படும் உதவி­க­ளைச் செய்­வ­தற்­காக இந்­தச் சங்­கம் ஏற்­கெனவே $50,000 உறுதி தெரி வித்­துள்­ளது.

பாகிஸ்­தா­னில் ஜூன் மாதம் முதல் இடை­வி­டாத பலத்த மழை கார­ண­மாக அந்த நாட்­டில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்­கப்­பட்டு உள்­ளது. 1,100க்கும் மேற்­பட்ட மக்­கள் மாண்­டு­விட்­ட­னர்.

ஒரு மில்லி­ய­னுக்­கும் மேற்­பட்ட வீடு­கள் அழிந்துவிட்­டன. 33 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் பாதிக்­கப்­பட்­டு உள்­ள­னர். அவர்­களுக்கு உதவ அதி­கா­ரி­கள் போராடி வரு­கி­றார்­கள். பல சாலை களும் பால­ங்களும் உடைந்­து­விட்டதால் பல பகு­தி­க­ளுக்­குச் செல்ல முடி­யா­மல் அதி­கா­ரி­கள் தவிக்கிறார்­கள்.

பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு குடிநீர் இல்லை. தங்க இட­மில்லை. சரி­யான சாப்­பா­டும் இல்லை. இந்த நிலை­யில் தண்ணீர் மூலம் பர­வும் நோய்­கள் தலை­தூக்­கும் ஆபத்து அதி­க­ரித்து வருகிறது என்று சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் தலைமை நிர்­வாகி பெஞ்­ச­மின் வில்­லி­யம் திங்­கட்­கி­ழமை அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

இந்­தச் சங்­கம் நவம்­பர் 30 ஆம் தேதி வரை நிதி திரட்­டும்.

கொடை வழங்க விரும்­பு­வோர் https://redcross.sg/media-centre/press-releases/1187-monsoon-floods-in-pakistan-singapore-red-cross-commits-s-50-000-for-survivors-and-affected-communities.html என்ற இந்த த­ளத்­திற்­குச் செல்­ல­லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.