மானபங்கச் சம்பவங்கள் அதிகரிப்பு

மானபங்கச் சம்பவங்கள் அதிகரிப்பு

2 mins read
cbf3b6b7-fea7-4155-a3ab-c2ca5c4d943e
-

மான­பங்­கச் சம்­ப­வங்­கள் கடந்­தாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் அதி­க­ரித்­துள்­ளன. அத்­து­டன், மூன்­றில் இரண்டு சம்­ப­வங்­களில், மான­பங்­கக் குற்­றம் புரிந்­த­வரை பாதிக்­கப்­பட்­ட­வர் அறிந்­தி­ருந்­த­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

ஜன­வரி முதல் ஜூன் வரை பதி­வான 773 மான­பங்­கச் சம்­ப­வங்­கள், சென்ற ஆண்­டின் 739 சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் 4.6% அதி­க­ரிப்­பா­கும். மேலும், மான­பங்­கக் குற்­றம் புரிந்­த­வரை பாதிக்­கப்­பட்­ட­வர் அறிந்­தி­ருந்த சம்­ப­வங்­களில் 9.6% அதி­க­ரிப்பு பதி­வா­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே, மான­பங்­கச் சம்­ப­வங்­களில் அறி­மு­க­மில்­லாத நப­ரால் குறி வைக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்­டின் முற்­பா­தி­யில் இருந்த 293இலி­ருந்து இவ்­வாண்­டின் முற்­பா­தி­யில் 284க்குக் குறைந்­துள்­ளது.

"பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பதி­வா­கும் மான­பங்­கச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை கவலை அளிக்­கும் ஒன்­றாக இருந்து வரு­கிறது," என்று காவல்­து­றை­யி­னர் நேற்று தெரி­வித்­த­னர்.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று வெளி­யி­டப்­பட்ட குற்­றச்­செ­யல் புள்­ளி­வி­வ­ரப்­படி, ஆண்­டின் முற்­பா­தி­யில் மொத்­தம் 80 மான­பங்­கக் குற்­றங்­கள் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் நடந்­தவை.

இந்­தச் சம்­ப­வங்­களில் அறி­மு­க­மில்­லாத நபர்­க­ளால் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் நேர்ந்­தவை 63.8%. அத்­து­டன் 13 வய­துக்­கும் 29 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் குறி­வைக்­கப்­பட்­ட­னர் என்­றும் அறி­யப்­ப­டு­கிறது.

கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள், அங்க அடை­யா­ளங்­கள் மற்­றும் உடுத்­தி­யி­ருந்த உடை­கள் என பாதிக்­கப்­பட்­டோர் கூறும் முக்­கி­யத் தக­வல்­கள் குற்­ற­வா­ளி­க­ளைப் பிடிக்­கப் பேரு­த­வி­யாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் மான­பங்­கம் தொடர்­பான விழிப்­பு­ணர்­வுக் காணொளி ஒன்றை எம்­ஆர்டி நிலை­யங்­களில் அடுத்த மாதம் வெளி­யி­ட­வுள்­ள­தாக காவல்­து­றை­யி­னர் கூறி­யுள்­ள­னர்.

எந்­நே­ர­மும் தங்களைச் சுற்றி என்ன நடக்­கிறது என்­ப­தைக் கவ­னிக்­கு­மாறு காவ­லர்­கள் பொது­மக்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். மின்­தூக்­கி­யில் தனி­யா­கச் செல்­லும்­போது திடீ­ரென ஒரு­வர் உள்ளே நுழைந்­தால் மின்­தூக்­கி­யி­லி­ருந்து வெளி­யே­று­வது பாது­காப்­பா­னது என்­றும் கூறி­யுள்­ள­னர். யாரே­னும் பின்­தொ­டர்­வது போல் தோன்­றி­னால் கூட்­ட­மான ஓர் இடத்தை நாடு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கிறது.