உலகின் ஆக அதிநவீன போர் விமானம் ஆர்எஸ்ஏஎஃப் வசம்

உலகின் ஆக அதிநவீன போர் விமானம் ஆர்எஸ்ஏஎஃப் வசம்

1 mins read
1a24f339-c5d4-499e-9bcd-2854fbb354b1
-

உல­கி­லேயே ஆக அதி­ந­வீன அம்­சங்­க­ளைக் கொண்ட நான்கு 'எஃப்-35பி' போர் விமா­னங்­கள், இன்­னும் நான்கு ஆண்­டு­களில் சிங்­கப்­பூர் குடி­ய­ர­சின் ஆகா­யப்­படை­யில் ஓர் அங்­க­மா­கி­வி­டும்.

ஐந்­தாம் தலை­முறை போர் விமா­னங்­க­ளாக விளங்­கும் இவை, 1998ஆம் ஆண்­டு­மு­தல் ஆகா­யப்­ப­டை­யி­ன­ரால் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் தற்­போ­தைய பழைய 'எஃப்-16' விமா­னங்­க­ளுக்­குப் பதி­லா­கக் கொண்­டு­வ­ரப்­படும்.

சிங்­கப்­பூர் உள்­பட தற்­போது 16 நாடு­கள் இவ்­வகை போர் விமா­னங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­திக்­கொள்­ளும் நிலை­யில் உள்­ளன.

குறு­கிய ஓடு­பா­தை­யி­லி­ருந்து கிளம்­பு­வது, செங்­குத்­தா­கத் தரை­யி­றங்­கு­வது போன்ற அம்­சங்­கள் இருப்பதால் 'எஃப்-35பி' வகை­யை சிங்­கப்­பூர் தேர்­வு­செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

படம்: சாவ்பாவ்