தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டாளிக் கட்சி: கட்சி உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை

1 mins read
f9675752-5b1a-4641-bac0-c5e5020bde9a
-

பாட்­டா­ளிக் கட்சி, அதன் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் குறித்து கட்சி உறுப்­பி­னர் டேனி­யல் கோ வெளி­யிட்ட கருத்­து­களை விசா­ரிக்க ஒழுங்­கு­ந­ட­வ­டிக்­கைக் குழுவை அமைத்­துள்­ளது.

திரு­வாட்டி கான் விவ­கா­ரத்­தை பாட்டாளிக் கட்சி கையாண்ட விதத்தை இணைப் பேரா­சி­ரி­யர் கோ தமது ஃபேஸ்புக்­ பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

அவர் பதிவுகளுக்கான கார­ணம் பற்றி விளக்­கம் தர கட்சி தம்மை நேர்­கா­ண­லுக்கு அழைத்­துள்­ள­தா­க­வும் அதற்­குச் செல்ல மறுத்­து­விட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார். முன்­னாள் தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான இணைப் பேரா­சி­ரி­யர் இதை­ நேற்றுமுன்தினம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

பாட்­ட­ளிக் கட்­சி­யி­லி­ருந்து வில­கும் எண்­ணம் இல்லை என்று அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் ேநற்று கூறி­னார்.