கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகளுக்கான (பீடிஓ) கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு உலு பாண்டான் பூங்கா இணைப்பின் மேலும் பல பகுதிகள் நாளை திறக்கப்படும்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று கிளமெண்டி நார்த்ஆர்க் கட்டு
மானத் தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து பூன் லே வே, ஆயர் ராஜா விரைவுச்சாலையிலிருந்து காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் மேம்பாலச் சாலைக்கு இட்டுச் செல்லும் பாதை மூடப்பட்டது.
நிலச்சரிவு காரணமாக வழிப்போக்கர் ஒருவர் காயமடைந்தார்.
பூங்கா இணைப்புப் பாதையின் சில பகுதிகளும் சேதமடைந்தன. அருகில் உள்ள சுங்கை உலு பாண்டான் கால்வாய்க்குள் மண் சரிந்தது. கால்வாய் இன்னும் பழுதுபார்க்கப்படாத நிலையில் கனமழை பெய்தால் வெள்ள அபாயம் இருப்பதாக வீடமைப்பு வளரச்சிக் கழகம் நேற்று அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
கனமழை பெய்தால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் எச்சரித்துள்ளது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்