அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை வேலையில் அமர்த்த லீ ஃபோங் கட்டுமானச் சேவைகள் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 1ஆம் தேதியன்று அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வேலை செய்துகொண்டிருந்தபோது உயரமான இடத்திலிருந்து விழுந்து காயமடைந்தார்.
பாதுகாப்பற்ற வேலைச் சூழல் காரணமாக அந்த ஊழியர் காயமுற்றதாக அமைச்சு நடத்திய விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக நிறுவனத்திடம் விசாரிக்கப்பட்டது.
அந்த ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

