கூடுதல் வனவிலங்குகள் பாதுகாக்கப்படலாம்

கூடுதல் வனவிலங்குகள் பாதுகாக்கப்படலாம்

2 mins read
de03f184-a202-4155-9458-53740b7ae5f0
பாதுகாக்கப்படும் வனவிலங்குப் பட்டியலில் இடம்பெறும் விலங்குகளில் ஒன்றான கடல் ஆமை. படம்: ஏஎஃப்பி -

சிங்­கப்­பூ­ரின் பாது­காக்­கப்­படும் வன­வி­லங்­குப் பட்­டி­ய­லில் இவ்­வாண்­டி­று­தி­யில் மேலும் சில விலங்­கு­கள் சேர்க்­கப்­ப­ட­லாம். தாவர வகை­கள், விலங்­கி­னங்­கள் ஆகி­யவை முற்­றி­லும் அழிந்­து­போ­கும் அபா­யத்­தைக் கணிக்­கும் ஆய்வு நிறை­வ­டைந்­த­வு­டன் இந்­ந­ட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­லாம்.

குறைந்­தது 37 வகை வன­விலங்கு­கள் பாது­காக்­கப்­பட்ட வன­வி­லங்­குப் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளன. தீங்கு விளை­விப்­போ­ரி­ட­மி­ருந்து இந்த விலங்­கு­க­ளுக்­குக் கூடு­தல் பாது­காப்பு வழங்­கப்­படுகிறது.

பல வகை கடல் ஆமை­கள், 'லெப்­பர்ட் கேட்' எனப்­படும் சிறுத்­தைப் பூனை உள்­ளிட்­டவை தற்­போது பட்­டி­ய­லில் இடம்­பெ­று­கின்­றன.

சம்­பந்­தப்­பட்ட வன­வி­லங்கு, சிங்­கப்­பூ­ரில் அல்­லது உல­க­ள­வில் அழிந்து போவ­தற்­கான அபாயம் இருக்­கி­றதா என்­ப­தைக் கருத்­தில்­கொண்டு அதைப் பட்­டி­ய­லில் சேர்ப்­பது குறித்து தேசிய பூங்­காக் கழ­கம் முடி­வெ­டுக்­கும். தேசிய பூங்­காக் கழ­கத்­தின் 'நேஷ­னல் பயோ­டை­வர்­சிட்டி சென்­டர்' எனும் தேசிய பன்­மு­கத்­தன்மை நிலை­யத்­தின் இயக்­கு­ந­ரான டாக்­டர் கேரன் துன் இதைத் தெரி­வித்­தார்.

தேசிய பூங்­காக் கழ­கம் அச்­சிடும் 'தி சிங்­கப்­பூர் ரெட் டேட்டா புக்' எனும் புத்­த­கத்­தில் சிங்­கப்­பூரில் உள்ள பல்­வேறு வன­வி­லங்கு­கள் எத்­த­கைய அபாயத்தை எதிர்­நோக்­கு­கின்­றன என்­பதை விவ­ரிக்­கிறது. அப்­புத்­த­கத்­தின் இரண்­டாம் பதிப்பு 2008ஆம் ஆண்டு அச்­சிடப்­பட்­டது.

இவ்­வாண்­டி­று­திக்குள் புத்­த­கத்­தின் மூன்­றா­வது பதிப்பை வெளி­யி­டத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

"பாது­காக்­கப்­பட்ட வன­வி­லங்குப் பட்­டி­யல் குறித்து தேசிய பூங்­காக் கழ­கம் சம்­பந்­தப்­பட்ட முக்­கி­ய­மா­ன­வர்­க­ளு­டன் அடிக்­கடி பரி­சீ­லனை செய்­யும். இவ்­வாண்­டி­று­தி­யில் 'தி சிங்­கப்­பூர் ரெட் டேட்டா புக்' புத்­த­கத்­தில் மேலும் தக­வல்­கள் சேர்க்­கப்­பட்ட பிறகு நாங்­கள் அவர்­களு­டன் பரி­சீ­லனை செய்­வோம்," என்று டாக்­டர் துன் கூறி­னார்.

வன­வி­லங்­குச் சட்­டத்­தின்­கீழ் பட்­டி­ய­லில் இடம்­பெ­றும் விலங்­கு­களுக்­குக் கூடு­தல் பாது­காப்பு வழங்­கப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூ­ரின் வன­வி­லங்­கு­களைப் பாது­காத்து அவற்­றைக் கவ­னித்­துக்­கொள்­வது இச்­சட்­டத்­தின் நோக்­கம்.

உதா­ர­ண­மாக, அனு­ம­தி­யின்றி பட்­டி­ய­லில் இடம்பெறும் வன­விலங்கை வேண்­டு­மென்றே கொன்றாலோ, பிடித்து வைத்­துக்­கொண்­டாலோ ஒரு­வ­ருக்கு அதி­க­பட்­சம் ஈராண்­டுச் சிறைத் தண்­ட­னை­யும் 50,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.