மீண்டும் குற்றம் செய்வோரை அடையாளம் காண புது ஏற்பாடு

மீண்டும் குற்றம் செய்வோரை அடையாளம் காண புது ஏற்பாடு

1 mins read
18772992-98dc-45f9-9dce-e10221234295
-

ஒரு புதிய சட்­டத்­தின்­படி, டிஎன்ஏ எனப்­படும் மர­பணுத் தக­வல் வளம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

குற்­ற­வாளி என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­வர்­கள் மறு­ப­டி­யும் குற்­றச் செய­லில் ஈடு­பட்­டால் அவர்­களை விரை­வாக அடை­யா­ளம் காண இதன்­ மூ­லம் வழி ஏற்­படும் என்று உள்­துறை துணை அமைச்­சர் சுன் சூவெ­லிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிறை­வேற்­றப்­பட்ட ஒரு மசோதா தொடர்­பான விவா­தத்­தின்­போது அவர் பேசி­னார்.

குற்­றம் நடக்­கக்­கூ­டிய இடங்­களில் திரட்­டப்­படும் தட­யங்­களை ஒப்­பிட்டுப் பார்ப்­ப­தற்கு ஏது­வாக பெரிய அள­வி­லான டிஎன்ஏ தகவல் வளம் அதி­கா­ரிக்குக் கிடைக்க அந்த மசோதா வகை செய்­கிறது.

தனிப்­பட்ட தக­வல்­கள் பாது­காப்பு தொடர்­பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரி­வித்­த­னர். அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், விதி­மீ­றல்­கள் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த கடு­மை­யான நடை­மு­றை­கள் அம­லில் இருக்­கும் என்றார்.