திறனாளர்களை ஈர்க்க இலக்கு

திறனாளர்களை ஈர்க்க இலக்கு

2 mins read
47a2ee6f-b12f-4600-97ec-e4ebe550c692
-

நிர்­வா­கச் சேவை, நீதித்­துறை, அரசு ஆணை பெற்ற கழகங்­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­

க­ளின் சம்­ப­ளம் உயர்த்­தப்­படும் என்று பொதுச் சேவைப் பிரிவு நேற்று அறி­வித்­தது.

இத்­து­றை­களில் சம்­ப­ளத் தொகை ஆகக் கடை­சி­யாக 15 ஆண்­டு­க­ளுக்கு முன்பு மாற்றி அமைக்­கப்­பட்­டது.

தற்­போ­தைய சந்தை வரை­ய­றை­யு­டன் ஒப்­பி­டும்­போது இத்­து­றை­களில் உள்ள சம்­ப­ளங்­கள் குறை­வாக இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 15 ஆண்­டு­களில் சம்­ப­ளத்­துக்­கான சந்தை வரை­யறை வெகு­வாக அதி­க­ரித்­து­விட்­ட­தா­கப் பொதுச் சேவைப் பிரிவு கூறி­யது.

"சம்­ப­ளம் உயர்த்­தப்­ப­டு­வ­தால் பொதுச் சேவைக்­குத் தொடர்ந்து பல திற­னா­ளர்­களை ஈர்க்­க­லாம். அது­மட்­டு­மல்­லாது, தற்­போது தலை­மைப் பத­வி­களில் இருக்­கும் திற­னா­ளர்­களை தக்­க­வைத்­துக்­கொள்­ள­லாம்," என்று அது தெரி­வித்­தது.

சம்­ப­ளத் தொகை ஐந்து விழுக்­காட்­டி­லி­ருந்து 12 விழுக்­காடு வரை உயர்த்­தப்­படும் என்­றும் சம்­பள வரம்­பு­களும் மாற்றி அமைக்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த மாற்­றங்­கள் அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரும். இந்த மாற்­றத்­தின் மூலம் நிர்­வா­கச் சேவை­யைச் சேர்ந்த ஏறத்­தாழ 300 அதி­கா­ரி­களும் நீதித்­துறை, அரசு ஆணை பெற்ற கழகங்கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 30 அதி­கா­ரி­களும் பல­ன­டை­வர்.

அவர்­களில், தலைமை நீதி­பதி, மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், நீதித்­துறை ஆணை­யர்­கள், தலை­மைச் சட்ட அதி­காரி, பொதுச் சேவை ஆணை­யத்­தின் தலை­வர், தலைமை கணக்­குத் தணிக்கை அதி­காரி ஆகி­யோ­ரும் அடங்­கு­வர்.

"தரத்­தைப் படிப்­ப­டி­யாக மேம்­

ப­டுத்­திக்­கொள்­ளும் முத­லாளி என்­கிற முறை­யில் போட்­டித்­தன்­மை­மிக்க சம்­ப­ளத்தை வழங்­கு­வ­து­டன் சேவைத் திட்­டங்­க­ளின் அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் மேம்­பாட்டு முயற்­சி­களைப் பொதுச் சேவை தொடர்ந்து வலுப்­ப­டுத்­தும்.

"சுழற்சி முறை வேலை, தனி­யார் மற்­றும் பொதுத் துறை­களில் இணைந்து வேலை அனு­ப­வம் பெறு­தல், தலை­மைத்­து­வத் திட்­டங்­கள் ஆகி­ய­வற்றை நிர்­வாக அதி­கா­ரி­கள் எதிர்­பார்க்­க­லாம்," என்று பொதுச் சேவைத் துறை தெரி­வித்­தது.

குறிப்­பிட்ட காலத்­துக்­குப் பிறகு அர­சாங்க அதி­கா­ரி­க­ளின் சம்­ப­ளம் தொடர்ந்து மறு­ஆய்வு செய்­யப்­படும் என்­றும் தேவைப்­பட்­டால் சம்பளத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அது கூறியது.