ஈஸ்வரன்: பொதுப் போக்குவரத்து நடைமுறைச் செலவுகள் 7% ஏற்றம்

ஈஸ்வரன்: பொதுப் போக்குவரத்து நடைமுறைச் செலவுகள் 7% ஏற்றம்

2 mins read
bd9e704a-cf2f-4c60-b9b0-de230eee4df0
-

கடந்த 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து 2021ஆம் ஆண்­டு­வரை, பொதுப் போக்­கு­வ­ரத்து நடை­மு­றைச் செலவு­கள் சரா­ச­ரி­யாக ஆண்­டுக்கு 7% உயர்ந்­துள்­ள­தா­கப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

அதே நேரத்­தில், வரு­மான உயர்வு அதற்கு ஈடா­ன­தாக இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

இதன் விளை­வாக, அர­சாங்­கம் அளித்­து­வ­ரும் மானி­யங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இப்­போ­தைக்கு ஆண்­டுக்கு $2 பில்­லி­ய­னுக்­கும் மேல் மானி­யம் வழங்­கப்­ப­டு­வ­தாக நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

புக்­கிட் பாஞ்­சாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா, பொதுப் போக்கு­வ­ரத்து சேவை­க­ளுக்கு வழங்­கப்­படும் மானி­யங்­களை அர­சாங்­கம் எவ்­வாறு முடி­வு­செய்­கிறது என்­றும் செலவினங்கள் அதி­க­ரித்­து­வரும் நிலை­யில் அவை மறு­ஆய்வு செய்­யப்­ப­டுமா என்­றும் கேட்­டார்.

அதற்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் ஈஸ்­வ­ரன், இப்­போ­தைய பய­னீட்­டா­ளர்­களும் வரி­செ­லுத்­தும் இப்­போ­தைய, எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரும் பொதுப் போக்­கு­வரத்து நிதிச் செல­வு­க­ளைப் பகிர்ந்து­கொள்­வது தொடர்­பில் மூன்று முக்­கிய அம்­சங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

முத­லா­வ­தாக, பொதுப் போக்கு­வரத்து உள்­கட்­ட­மைப்பு விரி­வாக்­கத்­திற்கு அர­சாங்­கம் தொடர்ந்து முழு­மை­யாக நிதி வழங்­கும். அடுத்த பத்­தாண்­டு­களில் ரயில் கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­த­வும் புதுப்­பிக்­க­வும் $60 பில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

இரண்­டா­வ­தாக, அதி­கா­ரி­கள் செல­வு­க­ளைக் குறைத்து, சிக்­க­னத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தற்­கான வழி­க­ளைக் கண்­ட­றி­ய­வும் வேண்­டி­யுள்­ளது என்­றார் அவர்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தால் செயல்­தி­றன்­மிக்க கொள்­மு­தல், பொதுப் போக்­கு­வ­ரத்து நடத்­து­நர்­க­ளால் அதிக உற்­பத்­தித்­தி­றன், புதிய குடி­யி­ருப்­புப் பகு­தி­களுக்­குச் சேவை­யாற்­றும் வகை­யில் ஒட்­டு­மொத்த பொதுப் போக்­கு­வரத்­துக் கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்­து­வதற்கு ஏற்ப பேருந்து, ரயில் சேவை ஏற்­பா­டு­களை உகந்­த­தாக்­கு­தல் ஆகிய வழி­மு­றை­களை அமைச்­சர் ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

எடுத்­துக்­காட்­டாக, டௌன்­டவுன் ரயில் பாதை திறக்­கப்­பட்ட பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு புக்கிட் பாஞ்­சாங் வட்டாரத்தில் பேருந்து சேவை வழித்­த­டங்­கள் அகற்­றப்­பட்­டன அல்­லது மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டன.

இறு­தி­யாக, பொதுப் போக்­கு­வரத்­துச் செல­வு­க­ளில் பய­ணி­கள் தங்­க­ளது நியா­ய­மான பங்­கைச் செலுத்­து­வதை உறு­தி­செய்­யும்­ வகையில் கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை இருப்­பது.

சம்­ப­ளங்­கள், எரி­சக்தி, பண­வீக்­கம் போன்ற கார­ணி­களும் கணக்­கில் எடுத்­துக்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று திரு ஈஸ்­வரன் சுட்­டி­னார்.

பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் தற்­போது கட்­ட­ணக் கணக்­கீட்டு முறையை மறு­ஆய்வு செய்து வரு­கிறது. அடுத்த ஆண்டு முற்­பா­தி­யில் அந்­ந­ட­வ­டிக்கை நிறை­வு­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்­டி­லும் அதற்கு அடுத்த ஆண்­டு­க­ளி­லும் இடம்­பெறும் கட்­டண மறு­ஆய்வு நட­வடிக்­கை­க­ளின்­போது புதிய கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை­ பயன்­படுத்­தப்­படும்.

மறு­ஆய்வு நட­வ­டிக்­கை­யால் நடப்­பி­லுள்ள கட்­ட­ணக் கணக்­கீட்டு முறை எவ்­வாறு மேம்­படும் என்று கேட்­ட­தற்கு, அதி­க­மா­னோர் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தால் பயண முறை­கள் எவ்­வாறு மாறி­ இருக்­கும் என்­ப­தை­யும் பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றம் கருத்­தில்­கொள்ள வேண்­டி­யி­ருப்­ப­தாக அமைச்­சர் ஈஸ்­வ­ரன் பதி­ல­ளித்­தார்.

எரி­பொ­ருள் செல­வு­கள், எரிபொருள் சந்தை நிலவரம், பண­வீக்க நெருக்­கடி­கள் போன்ற கார­ணி­க­ளை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது என்­றும் அவர் சொன்­னார்.