முன்னாள் 'ஏத்தோஸ்' அதிகாரிக்கு 16.5 ஆண்டுச் சிறை, 18 பிரம்படி

முன்னாள் 'ஏத்தோஸ்' அதிகாரிக்கு 16.5 ஆண்டுச் சிறை, 18 பிரம்படி

2 mins read
4b700218-2bd1-453a-a672-e7db3066d55e
கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி (இடது), பறிமுதல் செய்யப்பட்ட பணம், மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட துண்டுச்சீட்டு. படங்கள்: சிங்கப்பூர் காவல்படை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

ஜூரோங் கடன் வழங்கும் நிறுவனத்தில் தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் கொள்ளை

ஜூரோங்­கில் செயல்­படும் உரி­மம் பெற்ற கடன் வழங்­கும் நிறு­வ­னத்­தில் தோட்­டாக்­கள் நிரப்­பிய கைத்­துப்­பாக்­கி­யு­டன் கொள்­ளை­ய­டித்த முன்­னாள் துணைக்காவல் துறை (ஏத்­தோஸ்) அதி­கா­ரிக்கு 16.5 ஆண்­டுச் சிறைத்­தண்­ட­னை­யு­டன் 18 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

39 வயதாகும் மகடி முகமது முக்தார், 2016ஆம் ஆண்டு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கிக் கிளையைக் கொள்ளையடித்த கனடா நாட்டவரான டேவிட் ஜேம்ஸ் ரோச்சின் உத்தியைப் பின்பற்றித் தானும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கொள்ளையிட்ட நாளில் தனது தேவையைக் காகிதத்தில் எழுதி நிதி நிறுவன ஊழியர்களிடம் காட்டியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, புளோக் 135, ஜூரோங் கேட்வே சாலையில் உள்ள 'ஓடி கிரெடிட்' நிறுவனத்திற்குச் சென்ற மகடி, அந்தக் காகிதத்தை நிறுவன அதிகாரியிடம் காட்டினார்.

அப்போது அவர் சீருடையில் இல்லை. ஆனால் பணி நிமித்தமாக அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்களை நிரப்பி எடுத்துச் சென்றிருந்தார்.

ஊழி­யரை மிரட்டி 24,800 வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை­யைக் கொள்­ளை­ய­டித்த மகடி, அதில் 14,000 வெள்­ளி­யைத் தனது வங்­கிக் கணக்­கில் செலுத்­தி­னார். மீதித் தொகையை நண்­ப­ரி­டம் கொடுத்­தார்.

பின்­னர் துணைக்காவல் துறை தலை­மை­ய­கத்­துக்­குச் சென்று சீரு­டையை அணிந்­து­கொண்டு வழக்­கம்­போல வேலைக்­குச் சென்­றார். அத­னை­ அடுத்து ஏறக்­கு­றைய 11,000 வெள்­ளியை கடன்­மு­த­லை­கள் நால்­வருக்கு இணைய வங்­கிச் சேவை­யின் மூலம் செலுத்­தி­னார்.

அன்­றைய தினம் பணிக்­குச் சென்ற 'எஸ்டி எஞ்­சி­னி­ய­ரிங்' நிறு­வனத்­தின் குப்­பைத் தொட்­டி­யில் மிரட்­ட­லுக்­குப் பயன்­ப­டுத்­திய துண்­டுச் சீட்­டைக் கிழித்து வீசி­னார்.

கொள்­ளைச் சம்­ப­வம் நடந்த ஐந்து மணி நேரத்­திற்­குள் அவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் ஆயு­த­மேந்­திய கொள்­ளைச் சம்­ப­வத்­தில் துப்­பாக்கி பயன்­ப­டுத்­தப்­பட்­டது 15ஆண்­டு­களில் இதுவே முதல்­முறை என்று காவல்­துறை குறிப்பிட்டது.

காவல்­துறை அதி­கா­ரி­கள் மகடி கொள்­ளை­ய­டித்த பணத்­தில் 5,200 வெள்ளி தவிர எஞ்­சிய பணத்தை மீட்­டு­விட்­ட­னர். மிரட்­டல் வாச­கம் எழு­தப்­பட்ட காகி­தத்­தை­யும் அதி­கா­ரி­கள் மீட்­ட­னர். ஆயு­த­மேந்­திக் கொள்­ளை­ய­டித்­தல் தொடர்­பான சட்­டத்­தின்­கீழ் சுமத்­தப்­பட்ட மூன்று குற்­றச்­சாட்டு­களை மகடி நீதி­மன்­றத்­தில் ஒப்புக்­கொண்­டார்.

சட்­ட­வி­ரோ­தக் கடன்­மு­த­லை­கள் ஆறு பேரி­டம் மகடி சென்ற ஆண்டு கடன் வாங்­கி­னார். அந்­தக் கடனை அடைப்­ப­தற்கு கொள்­ளை­ய­டிக்க முடி­வெ­டுத்த மகடி, அதன் தொடர்­பில் இணை­யத்­தில் தக­வல் தேடி­ய­தா­க­வும் 'ஓடி கிரெ­டிட்' நிறு­வ­னத்­தில் பெண் ஊழி­யர்­கள் இருந்­த­தால் அதனை அவர் தேர்ந்­தெ­டுத்­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.