சிங்கப்பூரில் செயல்படும் ஏறக்குறைய 50 விழுக்காட்டு நிறுவனங்கள் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கூடுதலான ஊழியர்களை பணியில் சேர்க்கத் திட்டமிடுகின்றன. அண்மைய ஆய்வில் இது தெரியவந்தது.
'மேன்பவர் குருப்' எனும் ஆள்சேர்ப்பு நிறுவனம் 510 நிறுவனங்களிடம் இந்தக் கருத்தாய்வை நடத்தியது.
நெடுநாள் நிரப்பப்படாத காலியிடங்களில் புதிய ஊழியர்களைப் பணியமர்த்த சிங்கப்பூர் நிறுவனங்கள் முனைந்துள்ளதால், ஆள்சேர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பம், நிதி போன்ற துறைகளில் ஊழியர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். கல்வி, சுகாதாரம், சமூக சேவை, கட்டுமானம் போன்றவற்றில் தேவை குறைவு.

