நான்காம் காலாண்டுக்கான வர்த்தக நம்பிக்கைக் குறியீடு மேலும் சரிவு

2 mins read
b5a7c15f-003d-4057-9620-c56fd8fb0e37
-

இந்த ஆண்­டின் நான்­காம் காலாண்­டுக்­கான உள்­ளூர் வர்த்­த­கச் சூழல் நம்­பிக்கை மேலும் நலி­வ­டைந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தொடர்ந்து மூன்­றா­வது காலாண்­டாக வர்த்­தக நம்­பிக்­கைக் குறி­யீடு சரிந்­துள்­ளது. சேவைத் துறை, ஒட்­டு­மொத்த விற்­ப­னைத் துறை ஆகி­யவை மேலும் வீழ்ச்­சி­கண்­டது இதற்­குக் கார­ணம்.

சிங்­கப்­பூர் வர்த்­தக கடன் இலாகா நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், நான்­காம் காலாண்­டுக்­கான வர்த்­தக நம்­பிக்­கைக் குறி­யீடு 4.9 விழுக்­காட்­டுப் புள்­ளி­யா­கக் குறைந்­துள்­ளது. முந்­தைய காலாண்­டில் அது 5.1 ஆகப் பதி­வா­னது. சென்ற ஆண்­டின் நான்­காம் காலாண்­டில் அது 5.78 விழுக்­காட்­டுப் புள்­ளி­யாக இருந்­தது.

பொது­வாக விற்­பனை அளவு, நிகர லாபம், விற்­பனை விலை, புதிய கொள்­மு­தல் ஒப்­பந்­தங்­கள், சரக்­குக் கையி­ருப்­புப் பட்­டி­யல், வேலை வாய்ப்பு ஆகிய ஆறு அம்­சங்­களும் வர்த்­தக நம்­பிக்­கைக் குறி­யீட்டை நிர்­ண­யிக்­கின்­றன.

இவற்­றில் ஐந்து அம்­சங்­கள், மூன்­றாம் காலாண்­டில் இருந்த நிலை­யி­லேயே தொடர்­கிறது. ஆறில் மூன்று அம்­சங்­கள், காலாண்டு அடிப்­ப­டை­யில் முன்­னேற்­றம் கண்­டி­ருப்­ப­தா­க­வும் குறிப்­பி­டப்­பட்­டது.

சென்ற ஆண்டு 9.63 விழுக்­காட்­டுப் புள்­ளி­யாக இருந்த நிகர லாபம் பூஜ்­ஜி­யம் விழுக்­காட்­டுப் புள்­ளி­யாக வீழ்ச்­சி­கண்­டது.

சென்ற ஆண்டு 12.12 விழுக்­காட்­டுப் புள்­ளி­யா­கப் பதி­வான வேலை­வாய்ப்பு விகி­தம், இம்­முறை 8.96 விழுக்­காட்­டுப் புள்ளி ஆனது.

போக்­கு­வ­ரத்து, நிதி, உற்­பத்தி, கட்­டு­மா­னம் ஆகிய துறை­களில் வர்த்­த­கச் சூழல் நம்­பிக்கை மற்ற துறை­க­ளைக் காட்­டி­லும் அதி­கம் பதி­வா­ன­தாக அறிக்கை கூறி­யது.

சேவை, மொத்த விற்­பனை ஆகிய துறை­களில் துறை­யில் நம்­பிக்­கைக் குறி­யீடு குறைந்­துள்­ளது.

உள்­ளூர் வர்த்­தக நம்­பிக்­கைக் குறி­யீடு குறை­வ­தற்கு, ஏற்­று­ம­தித் தேவை குறை­வ­தும் புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள் அதி­க­ரிப்­ப­தும் ஒட்­டு­மொத்த உல­க­ளா­விய வளர்ச்சி மெது­வ­டைந்­தி­ருப்­ப­தும் கார­ணங்­கள் என்று சிங்­கப்­பூர் வர்த்­தக கடன் இலா­கா­வின் தலைமை நிர்­வாக அதி­காரி ஆட்ரே சியா குறிப்பிட்டார்.

இருப்­பி­னும் அனைத்­து­லக விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை வலு­வாக மீட்­சி­கா­ணும் வேளை­யில் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நேர­டிச் சேவை வழங்­கும் துறை­களும் மீட்­சி­ய­டை­வ­தால் போக்­கு­வ­ரத்து, கட்­டு­மா­னம் ஆகிய துறை­களில் வர்த்­தக நம்­பிக்­கைக் குறி­யீடு மேம்­பட்­டி­ருப்­பது கண்­கூடு என்­றார் அவர்.