தோழியின் திருமணத்துக்காக கிரீஸ் சென்றுவிட்டு, இஸ்தான்புல் வழியாக சிங்கப்பூர் திரும்ப முயன்ற ஆடை வடிவமைப்பாளருக்கு அதிர்ச்சி.
செப்டம்பர் 11ஆம் தேதி இரவு திருவாட்டி குவேயும் அவரது குடும்பத்தாரும் நாடு திரும்ப இருந்தனர்.
பயணத்துக்கு மூன்று மணி நேரம் இருந்தபோது, மிதமிஞ்சிய முன்பதிவுகளால் விமானத்தில் இடம் இல்லை என்று அவர்களிடம் கூறப்பட்டது. அவர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் ஓர் இரவு துருக்கியில் இருக்கும்படி ஆனது. மொத்தம் 14 பேர் அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர்.
விமான நிறுவனம் ஹோட்டல் செலவுக்கான பணத்தை ஏற்றுக்கொண்டதுடன், இலவசமாக பயண தேதியை மாற்றிக் கொடுத்தது. 600 யூரோ ($842) இழப்பீடு தரவும் நிறுவனம் முன்வந்ததாக திரு வாட்டி குவே கூறினார்.
ஆனால் தமது இளம் மகனை சிங்கப்பூரிலேயே விட்டு வந்த அவர், பிள்ளையைப் பார்க்க வீடு திரும்ப விரும்பியதாகக் கூறினார்.
மேலும் தாங்கள் ஒப்படைத்த பயணப்பெட்டிகளை மீண்டும் பெற ஒரு மணி நேரம் காத்திருக்கும்படி திருவாட்டி குவேயிடம் கூறப்பட்டது.
ஹோட்டலுக்குச் செல்லவும் ஒரு மணி நேரம் எடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

