$33 மி. கையாடியவர் வழக்கறிஞராக இனி தொழில் செய்ய முடியாது

2 mins read
9ea10d0e-dd6a-4d7d-9bd8-c9d5bb556688
-

தனது கட்­சிக்­கா­ர­ரின் பணத்­தில் 33 மில்­லி­யன் வெள்ளி கையாடி, சிங்கப்­பூ­லி­ருந்து தப்பி ஓடிய வழக்­க­றி­ஞர் ஜெஃப்ரி ஓங் சு அன் வழக்­க­றி­ஞர்­கள் பட்­டி­ய­லில் இருந்து நீக்­கப்­பட்­டுள்­ளார்.

ஜேஎல்சி அட்­வை­சர்ஸ் நிறு­வ­னத்­தின் முன்­னாள் நிர்­வாக பங்­கா­ளி­யான ஜெஃப்ரி ஓங் சு ஆன், நேர்­மை­யற்ற முறை­யில் நடந்­து­கொண்டு, சட்­டத் தொழில் (தொழில்­முறை நடத்தை) விதி­கள் பல­வற்றை மீறி­ய­தாக மூன்று நீதிபதி­க­ளைக் ­கொண்ட நீதி­மன்ற அமர்வு நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

ஓங்­கின் குற்­ற­வி­யல் வழக்கு இன்­னும் நிலு­வை­யில் உள்­ளது. அவர் தற்­போது நம்­பிக்கை மோசடி, ஏமாற்­று­தல் உட்­பட 76 குற்­றச்­சாட்டு­களை எதிர்­கொள்­கி­றார். சிங்­கப்­பூ­ரில் ஒரு வழக்­க­றி­ஞர் கையா­டிய பணம் தொடர்­பான குற்­றங்களில் ஆக அதிக தொகை­யி­லா­னது என்று அரசு வழக்­க­றி­ஞர் கூறினார்.

ஓங் சிங்­கப்­பூ­லி­ருந்து தப்பி ஓடி­ய­தா­க­வும், அவ­ரைப்­போல் தோற்­றம் கொண்ட ஆட­வ­ரின் திரு­டப்­பட்ட மலே­சிய கடப்­பி­த­ழு­டன் கோலா­லம்­பூர் ஹோட்­டல் ஒன்­றில் கைது செய்­யப்­பட்­ட­தா­க­வும் முன்­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவர் ஜூன் 2019 முதல் விசா­ர­ணை­யில் இருக்­கி­றார். 45 வய­தான ஓங், சாங்கி சிறைச்­சா­லை­யி­லி­ருந்து காணொளி இணைப்பு மூலம் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­னார். கடந்த ஆண்டு அவ­ருக்கு பிணை மறுக்­கப்­பட்­டது.

அவர் ஏதா­வது சொல்ல விரும்­பு­கி­றாரா என்று கேட்­கப்­பட்­ட­போது, வழக்­க­றி­ஞர் பட்­டி­ய­லில் இருந்து அவர் நீக்­கப்­பட வேண்­டும் என்ற சிங்­கப்­பூர் வழக்­க­றி­ஞர் சங்­கத்­தின் வாதத்தை தாம் ஒப்­புக்கொள்­வ­தாக ஓங் கூறி­னார். "இது தொடர்­பாக அடிப்­ப­டைக் கார­ணங்­களும், சூழ்­நி­லை­யும் நில­வி­ய­போ­தி­லும், தற்­போ­தைய வழக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவை பொருத்­த­மா­னவை அல்ல," என்­றார் அவர்.

அலைட் டெக்­னா­ஜ­லிஸ் மொத்­தம் 33,153,416.56 டாலர் தொகையை ஓங்­கின் நிறு­வ­னத்­தில் வைத்­தி­ருக்க ஒப்­புக்­கொண்­ட­தாக தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன், நீதி­ப­தி­கள் டே யோங் குவாங், ஜுடித் பிர­காஷ் ஆகி­யோரை உள்­ள­டக்­கிய நீதி­மன்­றம் அறிந்­தது.

அந்த நிறு­வ­னம் தான் தெரி­விக்­கும் வகை­யில் அந்­தத் தொகையை அலைட் டெக்­னா­ல­ஜிஸ் எப்­பொ­ழுது, யாருக்கு எப்­பொ­ழுது விடு­விக்க வேண்­டும் என்று தெரி­விக்­கும்­வரை ஓங்­கின் நிறு­வ­னம் அந்­தப் பணத்தை வைத்­தி­ருக்க ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­ட­தாக வழக்­க­றி­ஞர் சங்­கத்­தி­டம் அலைட் டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம் புகார் அளித்­தது.