சொகுசுப் பொருள் மோசடியில் 6 வழக்குகள்

சொகுசுப் பொருள் மோசடியில் 6 வழக்குகள்

1 mins read
d0bdc89a-8724-4b05-b975-47be0be93f60
-

ரோலெக்ஸ் கைக்­க­டி­கா­ரங்­கள் உள்­ளிட்ட பல ஆடம்­ப­ரப் பொருள் கள் மோச­டி­ தொடர்பாக வாடிக்­கை­யா­ளர்­கள் டிரேட்­நே­‌‌ஷன், டிரேட்­லக் ஷரி ஆகிய இரு நிறு­வனங்­கள் மீது ஆறு சிவில் வழக்­கு­க­ளைப் பதிவு செய்­துள்ளனர். வாடிக்­கை­யா­ளர்­கள் பணம் செலுத்தியும் அவர்களுக்கு பொருள்­கள் வந்து சேர­வில்லை. அத­னால் பணத்­தைத் திரும்­பக் கேட்டு அந்த வழக்­கு­கள் பதிவாகி­யுள்­ளன.

கிட்­டத்­தட்ட $6.7 மில்­லி­யன் தொகை மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூன் மாதம் முதல் பணம் செலுத்தியும் பொருள் வந்து சேரா­த­தற்­காக மேற்­கண்ட இரு நிறு­வ­னங்­கள் மீதும் 180 புகார்­கள் காவல் துறை­யில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. மோசடி செய்­யப்­பட்ட மொத்த மதிப்பு $32 மில்­லி­யன்.

இரு நிறு­வ­னங்­க­ளை­யும் ஒரு தம்­பதி நிர்­வ­கித்து வந்­த­னர். பி ஜியா­பெங், 26, என்ற ஆட­வரும் தாய்­லாந்து நாட்­ட­வ­ரான பன் சுக் சிரி­விப்பா, 27, என்ற அவ­ரு­டைய மனை­வி­யும் மலே­சியா­வில் பதி­வான லாரி ஒன்­றில் கள்ளத்­த­ன­மாக கடந்த ஜூலை 4ஆம் தேதி மலே­சி­யா­வுக்­குச் சென்­ற­னர். அவர்­கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜோகூர் பாரு­வில் உள்ள மல்வி ஹோட்­டல் ஒன்­றில் மலே­சிய காவல் துறை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்டனர்.