பாதசாரி மீது வாகனத்தை மோதியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

பாதசாரி மீது வாகனத்தை மோதியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
8d0d6f57-0a4d-4569-9108-58db1d49a96a
-

காரில் போதைப்­பொ­ருள் உட்­கொண்­ட­தற்­காக பிடி­பட்ட வாஸ்­வானி ரிச்­சர்ட் பிர­காஷ், 36, காவல்­து­றை­யி­னர் அவ­ரது வாக­னத்தை சோதனை செய்ய முயன்­ற­போது காரை நிறுத்­தா­மல் ஓட்­டிச் சென்­றுள்­ளார். தோ பாயோ வரை­ காவல்­து­றை­யி­னர் அவரை துரத்­திச் சென்­ற­னர். அப்­போது, ​​​​சாலை­யைக் கடந்­து­கொண்­டி­ருந்த ஒரு பாத­சாரி மீது மோதி­னார். அப்­போ­தும் நிறுத்­தா­மல் தொடர்ந்து ஓட்­டிச் சென்று மற்­றொரு வாக­னத்­தில் மோதி­னார்.

ஆபத்­தான முறை­யில் வாக­னம் ஓட்­டு­தல், கடு­மை­யான காயத்தை ஏற்­ப­டுத்து­தல் உள்­ளிட்ட பல குற்­றச்­சாட்­டு­களை நேற்று பிர­காஷ் ஒப்­புக்­கொண்டார்.

போதைப்­பொ­ருள் பயன்­பாடு, ஏனைய போக்­கு­வ­ரத்துக் குற்­றங்­கள் தொடர்­பான குற்­றங்­க­ளை­யும் ஒப்­புக்­கொண்ட பிர­காஷ், முந்­தைய குற்­றங்­களில் பிணை­யில் வெளி­யில் இருந்­த­போது குற்­றங்­க­ளைச் செய்­துள்­ளார். அவ்­வ­ழக்­கு­கள் இன்­னும் விசா­ர­ணை­யில் உள்­ளன.

பிர­கா­ஷின் வழக்கறிஞர் தண்டனைக்­ கு­றைப்பு மனுவை இறுதி செய்ய, நீதி­பதி வழக்கை ஒத்­தி­வைத்­துள்­ளார்.