'சிங்கப்பூரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மரண தண்டனை கொள்கைகள் நிர்ணயம்'

'சிங்கப்பூரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மரண தண்டனை கொள்கைகள் நிர்ணயம்'

2 mins read
b6e89a7c-ff5c-4233-9335-1aea1c088705
-

போதைப்­பொ­ருள் தொடர்பாக

சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் கொள்­கை­களும் விதிக்­கப்­படும் தண்­ட­னை­களும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு எடுக்­கப்­பட்­டவை என்­றும் அவை வெளி­நா­டு­கள், மரண தண்­டனை எதிர்ப்பு ஆர்­வ­லர்­கள், அனைத்­து­லக நாளி­தழ்­கள் ஆகி­ய­வற்­றால் நிர்­ண­யிக்­கப்­பட்­டவை அல்ல என்றும் புளூம்­பர்க்­கிற்கு­ அளித்த பேட்­டி­யில் சட்ட, உள்­துறை அமைச்­சர்

கா. சண்­மு­கம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

வட்­டார நாடு­களில் கட்­டுப்­

ப­டுத்­தப்­பட்ட பயன்­பாட்­டின்­கீழ் கஞ்சா கொண்டு வரப்­பட்­டுள்­ள­தால் அது சிங்­கப்­பூ­ருக்கு எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று புளூம்­பர்க் தொலைக்­காட்­சி­யின் ஹஸ்­லிண்டா அமின் அமைச்­ச­ரி­டம் கேள்வி எழுப்­பி­னார்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு சண்­மு­கம், போதைப்­பொ­ருள் பெரு­ம­ள­வில் எளி­தில் கிடைக்­கும் சூழல் எழு­வ­தால் கூடு­தல் சவால்­களை அது உரு­வாக்­கு­வ­தா­கக் கூறி­னார். இருப்­ப­னும், போதைப்­பொ­ருள் சமு­தா­யத்­துக்கு கேடு விளை­விக்­கும் என்­பது சிங்­கப்­பூ­ரர்­க­ளில் பெரும்­பா­லா­னோ­ரிடம் நல்­ல­தொரு புரி­தல் இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார். கடந்த ஜூன் மாதத்­தி­லி­ருந்து கஞ்சா உட்­கொள்­வது தாய்­லாந்­தில் சட்­ட­வி­ரோ­த­மா­காது.

மருத்­து­வப் பயன்­பாட்­டுக்­காக கஞ்­சா­வைப் பயன்­ப­டுத்­து­வது குறித்து பரி­சீ­லனை செய்து வரு­வ­தாக மலே­சிய அதி­கா­ரி­களும் தெரி­வித்­துள்­ள­னர்.

"கஞ்சா உட்­கொள்­வதை அனு­

ம­திக்க வேண்­டும் என்று சிலர் கருது ­கின்­ற­னர். சில ஊட­கங்­கள் வாயி­லாக கஞ்­சா­வைப் பற்றி வெளி

­யி­டப்­படும் தக­வல்­க­ளால் அதைப் பற்றி இளை­யர்­கள் சில­ருக்கு, அதில் எவ்­விதத் தவ­றும் இல்லை என்ற எண்­ண­மும் கருத்­தும் ஏற்­படும் வாய்ப்­பு­கள் உள்­ளன. இத்­த­கைய சவால்­களை எதிர்க்­கொள்ள வேண்டி இருக்­கிறது.

"சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் கொள்­கை­கள் கோலா­லம்­பூ­ரிலோ பேங்­காக்­கிலோ உரு­வாக்­கப்­ப­டு­பவை அல்ல. சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­கள் 400 பேராலோ, மூன்று அல்­லது நான்கு அனைத்­து­லக நாளி­தழ்­க­ளாலோ நிர்­ண­யிக்­கப்­ப­டு­வ­தில்லை," என்று அமைச்­சர் சண்­மு­கம் கூறி­னார்.

சுவூடனில் போதைப்­பொ­ரு­ளு­டன் தொடர்­பு­டைய கும்­பல்­க­ளால் குண்­டு­வெ­டிப்­புச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தை­யும் அமெ­ரிக்­கா­வில் அள­வுக்கு அதி­க­மான போதைப்­பொ­ருளை உட்­கொண்டு மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தை­யும் திரு சண்­மு­கம் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் மரண தண்­டனை விதிக்­கப்­படும் நடை­முறை முடி­வுக்கு வருமா என்று அமைச்­சர் சண்­மு­கத்­தி­டம் திரு­வாட்டி ஹஸ்­லிண்டா கேட்­டார்.

சிங்­கப்­பூ­ருக்­குள் போதை­மிகு அபி­னைக் கடத்­திய குற்­றத்­துக்­காக மலே­சி­ய­ரான நாகேந்­தி­ரன் கே. தர்­ம­லிங்­கம் அண்­மை­யில் தூக்­கி­லி­டப்­பட்­டார்.

அதற்கு முன்பு அவ­ருக்­குக் கருணை அளிக்­கும்­படி மனித உரிமை அமைப்பினரும் பிரிட்­டிஷ் செல்­வந்­தர் ரிச்­சர்ட் பிரான்­ச­னும் கேட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் மரண தண்­ட­னைக்கு எதி­ரா­ன­வர்­கள் என்ற தவ­றான புரி­தல் நில­வு­வ­தாக திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

மரண தண்­ட­னைக்கு எதி­ரான ஆர்­வ­லர்­கள் ஆர்ப்­பாட்­டத்­துக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­த­போது அதில் 400 பேர் கலந்­து­கொண்­ட­தாக அவர்­கள் கூறி­ய­தா­க­வும் திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.

ஆனால் உள்­துறை அமைச்சு நடத்­திய ஆய்­வில் பங்­கெ­டுத்த சிங்­கப்­பூ­ரர்­களில் 80 விழுக்­காட்­டுக்கு அதி­க­மா­னோர் மரண தண்­ட­னைக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் நலம் தரு­ம் அணு­கு­

மு­றை­க­ளை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சிங்­கப்­பூர் அர­சாங்­கத்­தின் கடமை என்­றார் அமைச்­சர் சண்­மு­கம். மரண தண்­டனை நடப்­பில் இருப்­ப­தன் மூலம் மிக மோச­மான, ஆபத்­தான குற்­றங்­க­ளைத் தடுத்து ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளைக் காப்­பாற்ற முடி­யும் என்று சிங்­கப்­பூர் அர­சாங்­கம் நம்­பு­வ­தாக திரு சண்­மு­கம் தெரி­வித்­தார்.