மாணவர் விழுந்து மரணம்: சாஃப்ரா பயிற்சி அதிகாரி மீது குற்றச்சாட்டு

மாணவர் விழுந்து மரணம்: சாஃப்ரா பயிற்சி அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
1be07b85-96b6-4c31-b7b8-a573a0c866d9
-

ஈசூனில் உள்ள சாஃப்ரா சாகச விளை­யாட்டு நிலை­யத்­தில் கடந்த ஆண்டு உய­ரத்­தி­லி­ருந்து மாண­வர் ஒரு­வர் விழுந்­த­தற்­குக் கார­ண­மாக இருந்­தார் என்ற சந்­தே­கத்­தின் பேரில் 22 வயது வெளிப்­புற நட­வ­டிக்­கை­கள் பயிற்சி அதி­காரி முக­மது நுருல் ஹக்­கிம் முக­மது டின் மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது.

அங்­குள்ள 'கெனோப்பி ஸ்கை வாக் ரோப்' பயிற்­சித் தளத்­தில் வேலை செய்த ஹக்­கிம், 15 வயது மாண­வ­ரான ஜெத்ரோ புவா சின் யாங்­கின் பாது­காப்பு இடை­வார் சரி­யா­கப் பொருத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா என்று உறு­தி­செய்ய தவறி விட்­டார் என்று குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது. இச்­சம்­ப­வம் கடந்த ஆண்டு பிப்­ர­வரி 3ஆம் தேதி பிற்­ப­கல் 1.25 மணிக்கு நிகழ்ந்­தது.

ஆங்­கிலோ-சீன தன்­னாட்­சிப் பள்­ளி­யைச் சேர்ந்த அம்­மா­ண­வர், பாது­காப்பு இடை­வார் அவி­ழவே அந்­த­ரத்­தில் தொங்­கிக் கொண்­டி­ருந்­தார் என்­றும் அத­னால் அவ­ரது தொண்­டைப் பகு­தி­யில் வார் அழுத்­தம் கொடுத்­த­தால் அவர் மூச்­சு­விட சிர­மப்­பட்­டார் என்­றும் பல உடல் அங்­கங்­கள் செயல்­இழந்த கார­ணத்­தால் அவர் உயிர் பிரிந்தது என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஹக்கிமுக்கு $10,000 பிணை அளிக்கப்பட்டுள்ளது.