நாடுகள் பலதரப்பட்ட சவால் களைச் சமாளிக்க வேண்டியுள்ள நிலையில் ஒத்துழைப்புக்கான கூடுதல் தளங்களை அமைக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
இந்தத் தளங்கள் நாடுகளுக்கு இடையே ஆக்ககரமான உறவையும் மேலும் வலுவான ஒத்துழைப் பையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் நேற்று தெரிவித்தார்.
சீனா-ஆசியான் எக்ஸ்போ சந்தை அத்தகைய தளங்களில் ஒன்று எனப் பொருளியல் ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் கூறினார்.
சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான பொருளியல் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது அந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
திரு ஹெங் 19வது சீனா-ஆசியான் எக்ஸ்போ நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் மெய்நிகர் வழியாக உரையாற்றினார்.
அந்த நான்கு நாள் நிகழ்ச்சி, சீனாவில் குவாங்சி மாநிலத்தில் உள்ள நானிங் நகரில் நடைபெற்று வருகிறது.
1,000க்கும் அதிகமான நிறுவனங்கள் அதில் பங்கேற்று வருகின்றன.
நேற்றைய தொடக்கவிழாவில் சீனாவின் துணைப் பிரதமர் ஹான் ஸெங் கலந்துகொண்டார்.
ஆசியான் தலைவர்களும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் கடந்த ஆண்டு முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தை அமைக்க உறுதி அளித்ததை திரு ஹெங் சுட்டினார்.
ஆசியானுக்கும் சீனா வுக்கும் இடையிலான கலந்துறவாடலின் 30 ஆண்டு நிறைவைக் குறிக்கும் இருதரப்பு சிறப்பு மாநாட்டில் அந்த இணக்கம் காணப்பட்டது.
அந்தப் பங்காளித்துவம், எல்லா துறைகளிலும் ஆசியான் சீனா ஒத்துழைப்பை மேம்படுத்தி, திறந்த அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த நிலைத்தன்மை மிக்க வட்டாரத்தை அமைக்க உதவும் என்று துணைப் பிரதமர் கூறினார்.

