வோங்: பெரும் நம்பிக்கை கொண்ட மக்கள்; கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் அரசாங்கம்

வோங்: பெரும் நம்பிக்கை கொண்ட மக்கள்; கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் அரசாங்கம்

2 mins read
8d04dce7-635a-42be-b50d-8aca4d209df1
ஹானர் அனைத்­து­லக கருத்­த­ரங்­கில் நேற்று கலந்­து­கொண்ட துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அர­சாங்­கம் தான் கொடுத்த வாக்­கைக் காப்­பாற்­றும் கடப்­பாட்­டு­டன் இருப்­ப­தா­லும் மக்­க­ளும் ஒரு­வரை மற்­றொ­ரு­வர் மதிப்­ப­தா­லும் சிங்­கப்­பூ­ரில் பெரு­ம­ளவு நம்­பிக்கை இருப்­ப­தாக துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான திரு லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார்.

ஆனால் மெத்­த­ன­மாக இருக்­கக்­கூ­டாது என்று எச்­ச­ரித்த அவர், இந்த நிலை எளி­தாக தடம் புர­ள­லாம் என்று கூறி­னார்.

உதா­ர­ணத்­துக்கு சொத்து, வரு­மான இடை­வெளி அதி­க­ரித்து, ஒரு­சி­ல­ருக்கு மட்­டும் இந்த அமைப்பு பலன்­த­ரு­வ­தாக மக்­கள் கரு­தி­னால் நம்­பிக்கை குறை­ய­லாம்.

அல்­லது மாண­வர்­கள் தாங்­கள் ஒரு வட்­டத்­துக்­குள் மட்­டும் இருப்­ப­தாக நினைத்­தாலும் மூத்த ஊழி­யர்­கள் வேலை பெற சிர­மப்­பட்­டா­லும் நம்­பிக்கை குறை­ய­லாம் என்று திரு வோங் கூறி­னார்.

இக்­கா­ர­ணத்­தால்­தான் சமூக உடன்­ப­டிக்­கை­யின் எல்லா அம்­சங்­க­ளை­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் சேர்ந்து ஆராய, முன்­னே­று­வோம் சிங்­கப்­பூர் நட­வ­டிக்­கையை அர­சாங்­கம் முன்­னெ­டுத்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

துணைப் பிர­த­மர் வோங், நன்­ ம­திப்பு (ஹானர்) அனைத்­து­லக கருத்­த­ரங்­கில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

ஈராண்­டுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் அந்த நிகழ்ச்சி, கொவிட்-19 பெருந்­தொற்­றால் நான்­காண்­டுக்­குப் பிறகு நேற்று நடை­பெற்­றது.

ஹானர் சிங்­கப்­பூர் எனும் அமைப்பு இக்­க­ருத்­த­ரங்கை நடத்தி வரு­கிறது. நாட்­டு­ந­ல­னுக்­காக நாண­யம் மிக்க கலா­சா­ரத்தை ஊக்­கு­விக்க அமைப்பு 2014ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது.

நிதி அமைச்­சில் இளம் அதி­கா­ரி­யாக இருந்­த­போது, தமது மனம் அமை­தி­யற்று இருந்­த­தால் நல்ல வாய்ப்பு, அதி­கச் சம்­ப­ளம் உள்ள வேறு வேலையை ஏற்­றுக் கொண்­டதாக திரு வோங் கூறினார்.

ஹானர் சிங்­கப்­பூர் அமைப்­பின் தற்­போ­தைய தலை­வ­ரான நிதி அமைச்­சின் அப்­போ­தைய நிரந்­த­ரச் செய­லா­ள­ர் திரு லிம் சியோங் குவான், தம்­மைப் பொறுமை காக்­கும்­படி அறி­வு­றுத்­தி­யதை திரு வோங் நினை­வு­கூர்ந்­தார்.

தனி­யார் துறை­யில் செய்ய முடி­யா­ததை அர­சாங்­கச் சேவை­யில் சாதிக்­க­லாம் என்று திரு லிம் அப்­போது கூறி­யி­ருந்­தார்.

அதைக் கேட்­ட­தால்­தான் அர­சாங்­கச் சேவை­யில் 15 ஆண்­டு­களும் அர­சி­ய­லில் 10 ஆண்­டு­களும் சேவை­யாற்ற முடிந்­தது என்று திரு வோங் பகிர்ந்துகொண்டார்.