உடல் உயரக் குறைபாடு உள்ளோருக்கான 'லிட்டில் மைட்டி வாரியர்ஸ்' ஆதரவுக் குழு

உடல் உயரக் குறைபாடு உள்ளோருக்கான 'லிட்டில் மைட்டி வாரியர்ஸ்' ஆதரவுக் குழு

2 mins read
7327112e-5b9b-4d02-bf99-4ace53f92ee2
ஜோஷுவா கூ நிறுவிய 'லிட்டில் மைட்டி வாரியர்ஸ்' ஆதரவுக் குழு, உடல் உயரக் குறைபாடு குறித்து மற்றவர்களுக்குக் கற்பிப்பதில் கவனம் செலுத்துகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திரு­வாட்டி ஜேஸ்­மின் டாங்­கிற்­குப் பத்து வய­தா­கும் ஜேசன் எனும் மகன் இருக்­கி­றார். ஜேசன் உடல் உய­ரக் குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­ட­வர்.

உல­கில் புதி­தா­கப் பிறக்­கும் 30,000 குழந்­தை­களில் ஒன்று இத்­த­கைய மர­ப­ணுக் கோளாற்­றால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக மருத்­து­வர்­கள் சொல்­கின்­ற­னர்.

உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளோடு இத்­த­கைய பிள்­ளை­கள் மற்­ற­வர்­க­ளின் கேலி, கிண்­டல், துன்­பு­றுத்­தல் ஆகி­ய­வற்­றுக்­கும் ஆளா­கின்­ற­னர்.

ஜேசன் பிறந்த பிறகு சிறு­வ­னுக்கு இத்­த­கைய குறை­பாடு இருப்­பதை மருத்­து­வர்­கள் கண்டு­பி­டித்­த­போது, இது­கு­றித்­துத் தனக்கு வழி­காட்ட யாரும் இல்லை என்று கூறு­கி­றார் திரு­வாட்டி டாங்.

இணை­யத்­தில் தேடிச் சேக­ரித்த சில தக­வல்­கள் சிங்­கப்­பூர் சூழ­லுக்­குப் பொருத்­த­மா­ன­வை­யாக இல்லை. இத்­த­கைய பெற்­றோ­ருக்­கான ஆத­ரவை வழங்­கு­கிறது உள்­ளூர் அமைப்­பான 'லிட்­டில் மைட்டி வாரி­யர்ஸ்'.

பிறந்­தது முதலே உடல் உய­ரக் குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்ட ஜோஷுவா கூ (படம்) என்­ப­வர் சென்ற ஆண்டு ஓய்­வாக இருந்த நேரத்­தில் இத்­த­கைய ஆத­ர­வுக் குழு­வைத் தொடங்க நினைத்­தார்.

புகைப்­ப­டக் கலை­ஞ­ரான இந்த 30 வயது இளை­யர் முனைப்­பு­டன் தனது யோச­னை­யைச் செயல்­படுத்­தி­னார். பிள்­ளை­க­ளுக்கு எங்கே உரிய கால­ணியை வாங்­க­லாம் என்­பது முதல், வீட்­டில் இத்­த­கைய சிறு­வர்­க­ளுக்கு உகந்த வகை­யில் மாற்­றங்­கள் செய்­ய­வேண்­டுமா என்­பது வரை உடல் உய­ரக் குறை­பாடு கொண்ட பிள்­ளை­க­ளின் பெற்­றோ­ருக்­குப் பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்­கு­கிறது 'லிட்­டில் மைட்டி வாரி­யர்ஸ்' குழு.

இதில் தற்­போது 12 வய­துக்­குக் கீழான 11 பிள்­ளை­களும் பதின்­ம­வ­ய­தி­ன­ரும் பெரி­ய­வர்­க­ளு­மாக எட்­டுப் பேரும் உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கின்­ற­னர்.

இத்­த­கைய குறை­பாடு உள்ள குழந்­தை­க­ளுக்கு 18 வயது வரை, உய­ர­மாக வளர்­வ­தற்­கு­ரிய ஊசியை தின­மும் செலுத்­தும் சிகிச்சை முறைக்கு ஆண்­டுக்கு 420,000 வெள்ளி வரை செல­விட நேரி­டும் என்று கரு­தப்­ப­டு­கிறது. ஆனால் சிங்­கப்­பூ­ரில் அந்த மருந்து இன்­னும் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வில்லை.