கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் தடுப்பூசி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31ஆம் தேதிவாக்கில் மொத்தம் 18,073 முறை நோவாவேக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று இதனைத் தெரிவித்தது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 16 மில்லியன் முறை கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.
இதில் நோவாவேக்ஸின் அளவு 0.1% ஆக இருக்கிறது. நோவாவேக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு வேண்டாத விளைவுகள் ஏற்பட்டதாக தனக்கு 28 புகார்கள் வந்திருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
ஐந்து பேர் தங்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்து இருந்தனர். இவர்கள் அனைவருமே குணமடைந்துவிட்டனர் என்று ஆணையம் குறிப்பிட்டது.
நோவாவேக்ஸ் தடுப்பூசி காரணமாக இங்கு யாருக்கும் இதயத் தசை அழற்சி ஏற்பட்டதாக தகவல் இல்லை. நோவாவேக்ஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டு வாரத்திற்கு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

