தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈராண்டுகளுக்குப் பிறகு மரினா பேயில் புத்தாண்டு வாணவேடிக்கை

1 mins read
cd4e2d72-02b2-49bf-8455-9f7e6ddf2f83
2019ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியன்று மரினா பேயில் அரங்கேறிய புத்தாண்டுக் கொண்டாட்டம். கோப்புப் படம்: சாவ்பாவ் -

ஈராண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு புத்­தாண்டை வர­வேற்­கும் வாண­வே­டிக்­கைக் காட்­சி­கள் மரினா பேயில் இடம்­பெ­ற­வுள்­ளன. கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லின் கார­ண­மாக இந்­நி­கழ்வு இரு ஆண்­டு­களாக நடை­பெ­ற­வில்லை.

கொள்­ளை­நோய்ப் பர­வல் காலத்­தின்­போது புத்­தாண்டை வர­வேற்­கப் பல்­வேறு குடி­யி­ருப்பு வட்­டாரங்­களில் வாண­வே­டிக்­கைக் காட்­சி­கள் இடம்­பெற்­றன. கூட்­டம் சேர்­வதைத் தவிர்க்­க­வும் கிரு­மிப் பர­வலைக் கட்­டுப்­ப­டுத்­த­வும் அவ்­வாறு செய்­யப்­பட்­டது.

2023ஆம் ஆண்­டுக்­கான 'மரினா பே சிங்­கப்­பூர் கவுண்ட்­ட­வுன்' எனும் புத்­தாண்டு வர­வேற்பு நிகழ்ச்­சிக்கு நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஏற்பாடு செய்கிறது. கொண்­டாட்ட நட­வ­டிக்­கை­கள் டிசம்­பர் மாதம் ஒன்­றாம் தேதி­யன்று தொடங்­கும்.

புத்­தாண்டை முன்­னிட்டு மரினா பே பகு­தி­யில் பல்­வேறு நிகழ்ச்­சி­களும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெ­றும். இறு­திக் கட்­ட­மாக டிசம்­பர் 31ஆம் தேதி­யன்று மாபெ­ரும் புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சி அரங்கேறும். 'ஏவெக்ஸ்' எனும் ஜப்­பா­னிய நிறு­வ­னத்­தின் தென்­கி­ழக்­கா­சி­யப் பிரிவு இவ்­வாண்­டின் வாண­வே­டிக்­கைப் படைப்­பு­களை வழங்­க­வுள்ளது. 2020ஆம் ஆண்­டுக்­கான வர­வேற்பு நிகழ்ச்­சி­யி­லும் இந்­நி­று­வ­னம்­தான் வாண­வேடிக்கைகளை வழங்­கி­யது.

ஒரு மாதம் நீடிக்­க­வுள்ள புத்­தாண்டு நிகழ்ச்­சி­களில் உணவு விழா­வும் அடங்­கும். அதன்­ தொடர்பில் பேஃபிரண்ட் நட­வடிக்கை வளா­கத்­தில் 30க்கும் மேற்­பட்ட கடை­கள் அமைக்­கப்­படும்.

டிசம்­பர் 26ஆம் தேதி­யிலி­ருந்து 31ஆம் தேதி­வரை 'ஷேர் தி மோமெண்ட்' எனும் விளக்கு சாகச நிகழ்ச்சி நடை­பெ­றும். ஃபுல்லர்ட்­டன் ஹோட்­டல், மெர்­ல­யன் ஆகி­ய­வற்­றின் தோற்­றத்­தையே மாற்­றும் வண்­ணம் இந்­நி­கழ்ச்­சி­யின் படைப்­பு­கள் அமை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. விளக்கு சாகச நிகழ்ச்சி உள்­ளூர் மாண­வர்­க­ளின் படைப்­பு­களைக்கொண்­டி­ருக்­கும்.