சிங்கப்பூரில் இருவருக்கு நீர்க்கச் செய்யாத ஃபைசர்-பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசியின் முழுக் குப்பி மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 15ஆம் தேதி ஹவ்காங்கில் உள்ள ஒரு மருந்தகத்தில் நடந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஒருவருக்கு தலைவலி ஏற்பட்டதுடன் இதயத்துடிப்பு அதிகமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியதாக அமைச்சு கூறியது. மற்றொருவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சு தெரிவித்தது.
ஒவ்வொரு குப்பியும் ஐந்து தடவை போடக்கூடிய தடுப்பூசி மருந்தைக் கொண்டது.
பாதிக்கப்பட்ட இருவருக்கும் ‘புளோஹெல்த் மெடிக்கல் கஃரப்@ஹவ்காங்’ மருந்தகத்தில் அதிக அளவு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது குறித்து செப்டம்பர் 19ஆம் தேதி தகவல் கிடைத்ததாக அமைச்சு தெரிவித்தது.
இச்சம்பவத்தை கடுமையாக் கருதுவதாகவும் இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது. சம்பந்தப்பட்ட மருந்தகமும் அதன் மருத்துவரும் தேசிய தடுப்பூசித் திட்டத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளதாகவும் அது தெரிவித்தது.