'அனைத்துலக நெருக்குதல் மிகைப்படுத்தப்படுகிறது'

'அனைத்துலக நெருக்குதல் மிகைப்படுத்தப்படுகிறது'

2 mins read
8b6cde96-844a-4b4c-ae5f-ad1cd405ee21
-

போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்படுவது பற்றி அமைச்சர்

சிங்­கப்­பூ­ரில் மரண தண்­ட­னைக்கு வலு­வான ஆத­ரவு இருப்­ப­தா­க­வும் அது பற்­றிய அனைத்­து­லக விமர்­சனம் மிகைப்­ப­டக் கூறப்­ப­டு­வதாகவும் சட்ட, உள்­துறை அமைச்சர் கா.சண்­மு­கம் அளித்த பேட்டி ஒன்­றில் கூறி­யி­ருக்­கி­றார்.

உண்­மை­யைச் சொல்­லப் போனால், போதைப்­பொ­ருள் கடத்த நினைப்­ப­வர்­கள், அவ்­வாறு செய்­வதை மரண தண்­டனை தடுப்­பதாக இந்த வட்­டா­ரத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்று குறிப்­பி­டு­வ­தாக அவர் சொன்­னார். போதைப்­பொருளுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் கடு­மை­யான நிலைப்­பாடு, உயிர்­க­ளைக் காப்­பதை இது காட்­டு­கிறது என்­றார் அவர்.

'தி சிட்னி மார்­னிங் ஹெரால்ட்' செய்தி நிறு­வ­னத்­துக்கு அமைச்­சர் சண்­மு­கம் அளித்த பேட்­டி­யில், போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ரான சிங்­கப்­பூ­ரின் சட்­டங்­கள் குறித்­தும் குற்­ற­வி­யல் தண்­ட­னைச் சட்­டத்­தின் சட்­டப்­பி­ரிவு 377ஏ பற்­றி­யும் பேசி­னார். அவர் அளித்த பேட்டியின் விவ­ரங்­களை உள்­துறை அமைச்சு நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது.

போதைப்­பொ­ருள் கடத்­தி­யோரைத் தூக்­கி­லி­டு­வதை 80 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் ஏற்­றுக்­கொள்­வதை உள்­ளூ­ரில் நடத்­தப்­பட்ட பல்­வேறு ஆய்­வு­கள் காட்­டி­யுள்­ள­தாக அவர் சொன்­னார்.

மேலும், போதைப்­பொ­ருள் கடத்­தி­னால் இங்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும் என்­ப­தால், மற்ற நாடு­களில் வசிப்­போர் இக்­குற்­றங்­கள் புரி­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­வதாக இந்த வட்­டா­ரத்­தில் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மரண தண்டனை ஆக்ககரமாக இருப்பதாக 83 விழுக்­காட்­டி­னரும் ஆயுள் தண்டனையைவிட அது ஆக்ககரமாக இருப்பதாக 69 விழுக்­காட்­டி­னரும் கூறி­னர்.

"இங்கு மரண தண்­டனை குறித்த விழிப்­பு­ணர்வு மிக­வும் அதி­கம். போதைப்­பொ­ருள் கடத்­தி­னால் பிடி­படும் சாத்­தி­யம் அதி­கம் என்­பது பற்­றிய விழிப்­பு­ணர்­வும் மிக­வும் அதி­கம். எனவே, பல­ரும் சிங்­கப்­பூ­ருக்கு போதைப்­பொ­ருள் கடத்த துணி­வ­தில்லை. மரண தண்­ட னையை நாங்­கள் நீக்­கி­னால், மேலும் பலர் போதைப்­பொ­ருளைக் கடத்­து­வர். அதில் எவ்­வித சந்தே­கமும் இல்லை," என்­றார் திரு சண்முகம்.