வேலையிடப் பாதுகாப்பை சரிசெய்யும் நேரம் இம்மாதம் இறுதிவரை நீட்டிப்பு

வேலையிடப் பாதுகாப்பை சரிசெய்யும் நேரம் இம்மாதம் இறுதிவரை நீட்டிப்பு

1 mins read
c70e437c-c30d-41e8-ad81-5f45b988a0e8
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

வேலை­யிட மர­ணங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தைத் தொடர்ந்து 'சேஃப்டி டைம்-அவுட்' எனும் தேவைப்­ப­டும்­போது தற்­கா­லி­க­மாக வேலையை நிறுத்­தும் நடை­முறை செப்டம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு அதிகமான ஆபத்து இருக்கும் துறைகள் தங்கள் பாதுகாப்பு நடைமுறைகளை சரிசெய்ய கூடுதல் அவகாசம் பெறும்.

ஏழு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பாதுகாப்பை மறுஆய்வு செய்ய செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 15 தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், உற்பத்தி, கடல்துறை, போக்குவரத்து போன்ற துறைகளையும் கனரக வாகனங்களை பயன்படுத்தும் துறைகளுக்கும் இந்த புதிய நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்­வாண்டு இது­வரை 37 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்ளன. சென்ற ஆண்டு முழு­வதும் 37 பேர் வேலை­யிட விபத்து­களில் உயி­ரி­ழந்­த­னர்.