இங் எங் ஹென்: பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

இங் எங் ஹென்: பயங்கரவாத மிரட்டல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது

2 mins read
87488dff-2493-4329-ba15-0aa795071d5c
பயங்கரவாத எதிர்ப்பு தகவல் வளாகத்தை நேற்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (நடு) திறந்து வைத்தார். படம்: தற்காப்பு அமைச்சு -

பயங்­க­ர­வா­த எதிர்ப்புச் செயல்­பாடு, உள­வுத்­துறை ரீதி­யான தக­வல் பகிர்வு ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளுக்­கிடையே ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கு சிங்­கப்­பூ­ரில் புதிய வளா­கம் ஒன்று நேற்று திறக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்சு இந்த பயங்­க­ர­வாத எதிர்ப்பு தக­வல் வளா­கத்­தைத் தொடங்­கி­யுள்­ளது.

பல­த­ரப்பு, அனைத்து அமைப்பு வளா­க­மா­கச் செயல்­படும் இவ்­விடத்­தில், ஒத்த சிந்­த­னை­யு­டைய நாடு­கள் கூடி வேவுத்­துறை தக­வல்­களைப் பகிர்ந்­து­கொள்­வ­து­டன் வட்­டா­ரத்­தில் நிக­ழக்­கூ­டிய பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக முன்­கூட்­டியே எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­க­லாம் என்­றது தற்­காப்பு அமைச்சு.

வட்­டா­ரப் பாது­காப்பு கார­ணங்­கள் கருதி வளா­கத்­தின் செயல்­பா­டு­க­ளைப் பற்றி அதி­கம் விவ­ரிக்க முடி­யா­விட்­டா­லும் கூட்டு உள­வுத்­துறை தக­வல்­கள் மற்­றும் தர­வு­க­ளைப் பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வா­தத்தை எதிர்க்­கும் முயற்­சி­களை ஒருங்­கி­ணைப்­ப­தற்கு வளா­கம் முக்­கி­யப் பங்­காற்­று­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

வளா­கம் சாங்கி பகு­தி­யில் அமைந்­துள்­ள­தாக தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். வளா­கத்­தின் தொடக்க விழா­வில் பேசிய அவர், பயங்­க­ர­வா­தக் கட்­ட­மைப்­பு­கள் மிக நுட்­ப­மான முறை­யில் இயங்­கத் தொடங்­கி­ உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

இத­னால் பயங்­க­ர­வாத மிரட்­டல் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது என்­றார் அவர்.

வளா­கம் கடந்த ஆண்டு ஜன­வரி முதல் செயல்­ப­டத் தொடங்­கி­ய­தா­கக் கூறிய டாக்­டர் இங், அதன் பங்­கா­ளி­க­ளின் மதிப்­பு­மிக்க பங்­க­ளிப்­பு­க­ளால் மட்­டுமே இது சாத்­தி­ய­மா­னது என்­றார். இது பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக வட்­டார நாடு­க­ளின் ஒரு­மித்த முடி­வைப் பிர­தி­ப­லிப்­ப­தா­க­வும் அமைந்­துள்­ளது.

நாடு­க­டந்த பயங்­க­ர­வாத மிரட்­டல்­க­ளுக்கு எதி­ரா­கச் செயல்­ப­டு­வதே சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் முக்­கி­யக் குறிக்­கோ­ளாக இருந்­து­வ­ரு­வ­தாக டாக்­டர் இங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறி­னார்.

ஆசி­யா­னின் கூட்டு உள­வுத்­துறை மற்­றும் கண்­கா­ணிப்பு ஆற்­றலை வளர்க்க இந்த வளா­கம் அமைக்­கப்­பட்­டது என்­றும் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் குறித்து இது முன்­னெச்­ச­ரிக்கை விடுக்­கும் என்­றும் அவர் அப்­போது குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 பய­ணக் கட்­டுப்­பாடு­கள் தளர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யில் வட்­டார நாடு­களில் பயங்­க­ர­வா­தி­க­ளின் எண்­ணிக்கை அதி­கரிக்­கக்­கூ­டும் என நாம் எதிர்­பார்க்­க­லாம் என்று நேற்­றைய நிகழ்­வில் டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

"பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான நம் முயற்­சி­களை ஒட்­டு­மொத்­த­மாக நாம் மீண்­டும் இரு­ம­டங்­காக்க வேண்­டும். நாம் ஒவ்­வொ­ரு­வ­ரும் அறிந்­த­தைப் பகிர்ந்­து­கொள்­ளும்­போது வட்­டா­ரப் போக்­கு­களை நம்­மால் மேலும் நன்கு புரிந்­து­கொள்ள முடி­யும்," என்று சுட்­டி­னார் டாக்­டர் இங்.