லீ: ஐநா கொள்கைகளுக்கு சிங்கப்பூர் பலத்த ஆதரவு

லீ: ஐநா கொள்கைகளுக்கு சிங்கப்பூர் பலத்த ஆதரவு

2 mins read
43544597-524d-4ac2-87f9-dfe9990c5339
-

ஐக்­கிய நாடு­கள் சபை போன்ற அமைப்­பு­கள் முன்­னெப்­போ­தும் இல்­லா­த­தைக் காட்­டி­லும் தற்­போது இன்­றி­ய­மை­யா­த­தாக விளங்க உல­கம் எதிர்­நோக்­கும் சிக்­கல் நிறைந்த சவால்­களே கார­ணம் என்­று சிங்­கப்­பூர் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்துள்­ளார்.

சிங்­கப்­பூர் போன்ற சிறிய நாடு­

க­ளுக்­கா­கக் குரல் கொடுப்­ப­தோடு உல­கில் அமை­தி­யை­யும் பாது­காப்­பை­யும் நிலை­நி­றுத்­தும் முயற்­சி­களில் இது­போன்ற நாடு­க­ளுக்கு ஐநா இடம் கொடுத்து வரு­கிறது என்று அவர் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்டுள்­ளார்.

ஐநா உலக மன்­றத்­தில் இடம்­பெ­றத் தொடங்கி 57 ஆண்­டு­கள் ஆன நிலை­யில், விதி­க­ளின் அடிப்

­ப­டை­யில் அமைந்த அந்த மன்­றத்­தின் கொள்­கை­க­ளுக்கு இணங்­க­வும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­க­வும் பொது மனப்­பான்­மை­யு­ட­னும் சிங்­கப்­பூர் திகழ்ந்து வரு­வ­தாக திரு லீ கூறியுள்­ளார்.

கடந்த திங்­கட்­கி­ழமை தொடங்­கிய ஐநா பொதுச் சபைக் கூட்­டத்­தில் 150 நாடு­க­ளைச் சேர்ந்த தலை­வர்­கள் நேர­டி­யா­கப் பங்­கேற்­றுள்­ள­னர்.

மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பிறகு நியூ­யார்க் நக­ரின் ஐநா தலை­மை­ய­கத்­தில் இவர்­கள் நேர­டி­யாக கூட்­டத்­தில் பங்­கேற்­கும் வாய்ப்பு கிடைத்துள்­ளது.

சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து கூட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், உயர்­மட்ட பொது விவாத அரங்­கில் சிங்­கப்­பூ­ரின் அறிக்­கையை வெளி­யிட்­டுப் பேச இருக்­கி­றார். வரும் ஞாயிறு வரை டாக்­டர் விவி­யன் கூட்­டத்­தில் பங்­கேற்­பார்.

இந்­நி­லை­யில், ஃபேஸ்புக் பதிவை வெளி­யிட்­டுள்ள பிர­த­மர் லீ, பரு­வ­நிலை மாற்­றம், அதி­க­ரிக்­கும் புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள், வளர்ந்து ­வ­ரும் தன்­னைப்­பே­ணித்­

த­னம் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­யில் உலக நாடு­கள் ஒன்­றை­யொன்று சார்ந்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யத்தை கொவிட்-19 கொள்­ளை­நோய் நினை­வூட்டி இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார்.

"ஐநா போன்ற அமைப்­பு­கள் இதற்கு முன்­னர் இல்­லாத முக்­கி­யத்­து­வத்­தைத் தற்­போது பெற்­றுள்­ளன.

"நிலை­யான அனைத்­து­ல­கச் சூழலை உரு­வாக்க நாடு­கள் ஒன்­றி­ணை­வ­தற்­கான தளத்தை அவை உரு­வாக்கி உள்­ளன," என்­றார் திரு லீ.

இதற்­கி­டையே, இதில் இணைக்­கப்­பட்­டுள்ள காணொ­ளி­யில், 1965ல் சுதந்­தி­ரம் பெற்­றது முதல் ஐநா­வை­யும் அதன் சாச­னத்தையும் சிங்­கப்­பூர் வலு­வாக ஆத­ரித்து வரு­வ­தாக ஐநா­வுக்­கான சிங்­கப்­பூ­ர் தூதர் பர்­ஹான் கஃபூர் தெரி­வித்துள்­ளார்.

ஒரு சிறிய நாடு என்ற முறை­யில் ஐநா­வின் முயற்­சி­கள் வெற்றி காண்­ப­தில் சிங்­கப்­பூர் மிகுந்த ஆர்­வம் காட்­டு­வ­தா­க­வும் திரு கஃபூர் தமது காணொளிப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.