தெம்பனிஸில் உள்ள செயின்ட் ஹில்டா உயர்நிலைப் பள்ளியின் வெளியே பெண் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டார். ஜூலியானா அப்துல் காதிர், 53, எனப்படும் அவர் பள்ளிக்கூடத்திற்கு வெளியே நின்றிருந்தபோது இரண்டு ஆயுதங்களைத் தம்வசம் வைத்திருந்ததாக நேற்று குற்றம் சாட்டப்பட்டது. திங்கட்கிழமை மாலை இரு கத்திகளை அப்பெண் வைத்திருந்தது பற்றி காவல்
துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் குறைந்தபட்சம் 10 காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணைச் சூழ்ந்து இருந்ததைக் காணமுடிந்தது. விசாரணைக்கு ஒத்துழைக்காத அந்தப் பெண் தமது அடிவயிற்றில் தம்மைத் தாமே குத்திக்கொண்டதாக காவல்துறை கூறியது. சாங்கி பொது மருத்துவமனையில் அனு
மதிக்கப்பட்ட அவர் மனநலப் பரிசோதனைக்காக விசாரணைக் காவலில் வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. வழக்கு மீண்டும் அக்டோபர் 12ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

