தமது முன்னாள் காதலியை நெஞ்சிலும் அடிவயிற்றிலும் பலமுறை கத்தியால் குத்திய 37 வயது ஆடவருக்கு நேற்று நீதிமன்றத்தில் 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடல் முழுவதும் 29 இடங்களில் கத்திக்குத்துக் காயங்களுடனும் வெட்டுக் காயங்
களுடனும் ரத்த வெள்ளத்தில் வீழ்ந்த தாம் மீ யோக், 34, என்னும் அந்தப் பெண் மாண்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
சரமாரியாகக் கத்தியால் குத்தப்பட்டதில் அந்தப் பெண்ணின் விலாவில் மூன்று எலும்புமுறிவுகள் ஏற்பட்டன. 2021 பிப்ரவரி 16ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 308ன் வெற்றுத்
தளத்தில் சம்பவம் நிகழ்ந்தது.
இந்தப் பெண்ணும் சீனாவைச் சேர்ந்த ஸெங் சியான் ஃபெங்கும் 2018 டிசம்பர் மாதம் ஒரு வீட்டின் வெவ்வேறு அறைகளில் தங்கி இருந்தபோது பழகத் தொடங்கினர். ஏற்கெனவே மணமான ஸெங், இங்கு வேறொரு பெண்ணுடனும் பழக்கம் வைத்திருந்தார்.
அதேநேரம் மலேசியரான திருமதி தாம் மணமுறிவு பெற்றவர். இவரது நான்கு பிள்ளைகள் மலேசியாவில் வசிக்கின்றனர். இந்
நிலையில், இவருடன் பழகத் தொடங்கியதும் ஸெங் தமது மனைவியை மணமுறிவு செய்தார். 2019 செப்டம்பர் முதல் 2020 நவம்பர் வரை திருமதி தாமின் அறையை ஸெங் பகிர்ந்துகொண்டார்.
இதற்கிடையே, 2020 நவம்பர் 17ல் ஸெங்கைவிட்டு விலகுவதாக தாம் சொல்லியதைத் தொடர்ந்து, ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் உள்ள திறந்தவெளி கார் நிறுத்து மிடத்தில் இருவரும் வாக்குவாதம் செய்தனர். அப்போது பேனாக் கத்தியால் தம்மைத் தாமே குத்திக்கொண்ட ஸெங், பின்னர் திருமதி தாமைக் கீழே தள்ளி அவரையும் அந்தக் கத்தியால் வெட் டினார். இந்தக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ஸெங் பின்னர் பிணையில் வெளியே வந்தார்.
திருமதி தாமுடன் மீண்டும் பழக பலமுறை முயன்ற இவர், அந்தப் பெண்ணின் கைபேசியில் வேறோர் ஆடவரின் குறுந்தகவலைக் கண்டு சினமுற்றார். அந்தக் கைபேசியை உடைத்து நொறுக்கினார். 2021 பிப்ரவரி 16ஆம் தேதி இரவு தமது மீதான வழக்கையும் காதலியின் வேறொரு தொடர்பையும் எண்ணி குடிக்கத் தொடங்கினார்.
திருமதி தாம் தங்கியிருந்த புளோக்கிற்கு அன்று இரவு 10 மணியளவில் சென்று அந்தப் பெண்ணின் வருகைக்காகக் காத்திருந்தார்.
அப்போது தொடர்ந்து குடித்துக் கொண்டு இருந்தார். வந்ததும் அந்தப் பெண்ணை நோக்கி ஸெங் வேகமாகச் சென்றார். அந்தப் பெண் பின்வாங்கி ஓடினார். துரத்திச் சென்ற ஸெங் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்தப் பெண்ணை சரமாரியாக் குத்தினார்.
அப்பெண் கீழே விழுந்த பின்னரும் தொடர்ந்து கத்தியால் குத்திக் கொண்டிருந்தார் ஸெங். அங்கிருந்த ஓர் இளையர் தமது தனிநபர் நடமாட்டச் சாதனத்தால் மோதி அவரைத் தடுக்க முயன்றும் அதற்குப் பலனில்லை. இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அந்தப் பெண் மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஸெங் மீது தொடக்கத்தில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. ஆயினும், கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் தாம் செய்வது என்னவென்று அறியாத நிலையில் இருந்ததாக மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நோக்கமில்லா மரணம் என்று வகைப்படுத்தப்பட்டது.

