அதிக ஆபத்துள்ள துறைகளில் உள்ள நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். அவற்றுக்கான பாதுகாப்பு பணிநிறுத்த அவகாசம் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
இந்த நிறுவனங்கள், செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை கட்டாயம் பணிகளை நிறுத்தி பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியிருந்தது.
இப்போது, வரும் 30ஆம் தேதிக்குள் அவை பாதுகாப்பு நடை முறைகளை மறுஆய்வு செய்வதற்கான பட்டியலை முடித்தாக வேண்டும். மனிதவள அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி இது.
கட்டுமானம், உற்பத்தி, கடற்துறை, செய்முறை, போக்குவரத்து, கிடங்கு ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கும் லாரிகள், பாரந்தூக்கிகள் போன்ற கனரக வாகனங்களைப் பயன்படுத்தும் துறைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.
கூடுதல் அவகாசம் முடிந்த வுடன் நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய மனிதவள அமைச்சு சோதனைகள் நடத்தும். பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யாத நிறுவனங்கள் மீது அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

