அமைச்சர் இந்திராணி: நிதி அறிவு பெண்களுக்கு முக்கியம்

அமைச்சர் இந்திராணி: நிதி அறிவு பெண்களுக்கு முக்கியம்

2 mins read
2bfa4789-cf52-43c2-98a7-48fce526f1d8
-

பொன்­மணி உத­ய­கு­மார்

பெண்­கள் தங்­கள் விருப்­ப­திற்­கேற்ப முடி­வு­களை எடுப்­ப­தற்­கும் நிதி சார்ந்த சுதந்­தி­ரம் பெறு­வ­தற்­கும் நிதித்­துறை பற்­றிய அறிவு அவசியம் என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­ச­ரும் தேசிய வளர்ச்சி; நிதி இரண்­டாம் அமைச்­ச­ரு­மான இந்தி ராணி ராஜா நேற்று நடந்த 'மணி ஐடி­யாஸ்' நிதி­ய­றி­வுப் பயி­ல­ரங்­கில் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

அமைச்­சர் நிதித்­துறை அறிவு ஒவ்­வொரு வய­தி­ன­ருக்­கும் எவ்­வாறு பொருந்­தும் என்­பதை அமைச்சர் பகிர்ந்துகொண்­டார்.

ஆசிய வட்­டா­ரத்­தைப் பொறுத்த வரை, சிங்­கப்­பூ­ரில் 80 விழுக்­காட்டி னர் ஏதோ ஒரு முறை­யில் சேமிப்பு களையோ அவ­சர நிதி­யையோ ஒதுக்க திட்­ட­மிட்­டுள்­ளார்­கள் என்பது தனக்கு மன­நி­றைவை அளிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

சிறு­வ­ய­தி­லி­ருந்தே சேமிப்­புத் திட்­டங்­களைப் பிள்­ளை­க­ளி­டம் அறி­மு­கப்­ப­டுத்­து­வது வாழ்­நாள் முழு­வ­தும் அவர்­க­ளுக்­குப் பய­னளிக்­கும் என்­று அவர் கூறினார்.

சேமிப்­பு­க­ளைச் விவே­க­மா­கச் செல­வி­டு­வ­தும் கணக்கு வைத்­துக்­ கொள்­வ­தும் பதின்ம வய­தி­னருக்கு வருங்­கா­லத்­தில் நிதி சார்ந்த முடிவு­களை எடுக்க உத­வும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

அண்­மை­யில் புதி­தாக வேலைக்கு சேர்ந்­துள்ள இளையர்கள் தங்­கள் சேமிப்­பு­க­ளைப் பெருக்க திட்­ட­மிட வேண்­டும் என்று கூறிய அமைச்­சர், குறிப்­பாக மற்­ற­வர்­களைச் சார்ந்­தி­ருப்­ப­தைத் தவிர்க்க சுய­மாக நிதி வச­தி­களை பெண்கள் அமைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

சிங்­கப்­பூரை பொறுத்­த­வரை ஆண்­களைவிட பெண்­கள் நீண்ட ஆயுளைக் கொண்டு உள்­ள­தைப் புள்ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்றன.

இத­னால் பெண்­கள் நிதி சார்ந்த சுதந்­தி­ரம் பெற்று சுய­மாக தங்களைப் பார்த்­துக்கொள்­ளும் ஆற்றலை வளர்த்­துக்கொள்ள வேண்டும் என்­றும் அமைச்­சர் இந்திராணி தெரி­வித்­தார்.

ஒவ்­வொ­ரு­வரும் தங்கள் நிதி வச­தி­க்­கேற்ப செல­வி­டு­வது, மத்திய சேம நிதி­யைப் பற்றி அறிந்து கொள்வது, மேற்­ப­டிப்­புக்­காகத் திட்­ட­மிட்­டு­வது, ஒய்வுபெறும் காலத்­திற்­குத் தேவை­யான நிதியை ஒதுக்கு­வது போன்­ற­வற்­றின் அவ­சி­யத்­தை­யும் அவர் எடுத்­து­ரைத்­தார்.

சிண்டா நடத்தி வரும் நிதி­யறிவு சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், இணை­யத்­தில் இருக்­கும் நம்­பிக்­கை­யான தளங்­கள், பள்­ளி­களில் மாண­வர்­களுக்­காக நடத்­தப்­படும் பயி­ல­ரங்கு­கள் போன்­ற­வற்­றைப் பயன்­ப­டுத்தி மக்­கள் தங்­க­ளது நிதி­ய­றிவை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா ஊக்­கு­வித்­தார்.