வெளிநாடுகளில் போதைப்பொருள் புழக்கம்: சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 41 பேர் கைது

வெளிநாடுகளில் போதைப்பொருள் புழக்கம்: சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 41 பேர் கைது

1 mins read
2ce6033e-2ca0-4a78-9b1a-efeb446b112d
-

வெளி­நா­டு­களில் சட்­ட­வி­ரோ­மாக போதைப்­பொ­ரு­ளை புழங்­கிய சந்­தே­கத்­தின் பேரில், பல சோதனைச்­சா­வ­டி­க­ளி­லும் கடந்த ஜன­வரி முதல் ஆகஸ்ட் வரை 41 சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் கைதா­யி­னர்.

அப்­படிக் கைதா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை, கொவிட்-19க்கு முந்­திய அளவைவிட குறைவு என்று மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப்­ பிரிவு தெரி­வித்­துள்­ளது. தொற்றுக் கார­ண­மாக எல்­லை­கள் மூடப்­பட்டு இருந்­ததே இதற்­குக் கார­ணம்.

கைதா­ன­வர்­களில் பெரும்­பாலா­னோர் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வெளி­நா­டு­களில் போதைப்­பொ­ரு­ளைச் சட்­ட­வி­ரோ­த­மாகப் பயன்­ப­டுத்­தி­னால் அவர்­கள் அந்தக் குற்­றத்தை சிங்­கப்­பூ­ருக்­குள் செய்­த­தா­கவே கரு­தப்­பட்டு போதைப்­பொருள் தவ­றான பயனீட்­டுச் சட்­டத்­தின்­கீழ் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படக்­கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்­மு­றை­யாக குற்­றம் செய்­தி­ருப்­போ­ருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்­டு­கள் வரைப்­பட்ட சிறைத்­தண்­டனை விதிக்க முடி­யும். $20,000 வரை அப­ரா­தம் விதிக்­க­வும் சட்­டத்­தில் இடம் இருக்­கிறது.

குற்றவியல் குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­காதோருக்குப் பெரும்­பா­லும் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டாது என்று இந்­தப் பிரிவு தெரி வித்­தது. அத்­த­கை­யோர் சீர்­தி­ருத்த நடை­மு­றை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வர்.

நேரடி கண்­கா­ணிப்­புச் செயல்­திட்­டங்­க­ளின்­கீழ் அவர்­கள் வைக்­கப்­ப­ட­லாம்; போதைப்­பொருள் மறு­வாழ்வு பயிற்­சிக்கு அல்­லது சிகிச்­சைக்கு அனுப்­பப்­ப­ட­லாம்.