ஆள் கடத்தல் மோசடி; $350,000 பறிபோனது; சந்தேக நபர் கைது

ஆள் கடத்தல் மோசடி; $350,000 பறிபோனது; சந்தேக நபர் கைது

1 mins read
75d7a3cc-3ef3-4232-93f8-3e78b2b5c473
-

கடத்­தல் மோசடி ஒன்­றில் சம்­பந்­தப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­வ­தை­யொட்டி 21 வயது மாதை அதி­கா­ரி­கள் கைது செய்துள்ளனர்.

அந்த மோச­டி­யில் ஒரு­வர் $350,000க்கும் மேற்­பட்ட தொகை­யைப் பறி­கொ­டுத்து இருக்­கி­றார்.

பணத்­தைப் பறி­கொ­டுத்த பெண்­ணின் கைகளும் கால்­களும் கட்­டப்­பட்ட நிலை­யில், தன்­னைத் தானே காணொ­ளிப் படம் எடுக்க அந்­தப் பெண் வலி­யு­றுத்­தப்­பட்­டார். அந்­தக் காணொ­ளியை வைத்து சீனா­வில் உள்ள அந்­தப் பெண்­ணின் பெற்­றோ­ரி­டமிருந்து மேலும் பிணைப் பணம் கேட்க மோச­டிக்­கா­ரர்­கள் திட்­ட­மிட்­ட­னர்.

செவ்­வாய்க்­கி­ழமை புகார் கிடைத்­ததை அடுத்து சந்­தே­கப் பேர்­வழி பிடி­பட்­ட­ார். புகார் தாக்­க­லா­ன­தற்கு முன்பு சீனா­வில் உள்ள அந்த மாதின் பெற்­றோ­ருக்கு ஒரு காணொளி சென்று சேர்ந்­த­தா­க­வும் மண்­ட­ரின் மொழி­யில் பேசிய ஒரு­வர் பிணைப் பணம் கேட்­ட­தா­க­வும் காவல்­துறை கூறியது.