கடத்தல் மோசடி ஒன்றில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுவதையொட்டி 21 வயது மாதை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அந்த மோசடியில் ஒருவர் $350,000க்கும் மேற்பட்ட தொகையைப் பறிகொடுத்து இருக்கிறார்.
பணத்தைப் பறிகொடுத்த பெண்ணின் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில், தன்னைத் தானே காணொளிப் படம் எடுக்க அந்தப் பெண் வலியுறுத்தப்பட்டார். அந்தக் காணொளியை வைத்து சீனாவில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரிடமிருந்து மேலும் பிணைப் பணம் கேட்க மோசடிக்காரர்கள் திட்டமிட்டனர்.
செவ்வாய்க்கிழமை புகார் கிடைத்ததை அடுத்து சந்தேகப் பேர்வழி பிடிபட்டார். புகார் தாக்கலானதற்கு முன்பு சீனாவில் உள்ள அந்த மாதின் பெற்றோருக்கு ஒரு காணொளி சென்று சேர்ந்ததாகவும் மண்டரின் மொழியில் பேசிய ஒருவர் பிணைப் பணம் கேட்டதாகவும் காவல்துறை கூறியது.

