தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றவாளி திருந்தி வாழ மஞ்சள் நாடா ஓட்டம் மூலம் $150,000

2 mins read
147c62ff-2d26-4860-aa00-20336d8387f0
மஞ்சள் நாடா ஓட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். படம்: சாவ் பாவ் -

மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் ஏறக்­கு­றைய 3,000 பேர் மஞ்­சள் நாடா ஓட்­டத்­தில் நேற்று கலந்­து­கொண்­ட­னர்.

முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் திருந்தி வாழ அந்த நிகழ்ச்சி மூலம் அவர்­கள் $150,000 திரட்­டி­னர்.

இரண்­டாண்டு கால­மாக மஞ்சள் நாடா ஓட்­டம் நடக்­க­வில்லை. இந்த ஆண்டு நிகழ்ச்சி '2ஆம் வாய்ப்­புக்­காக நாங்­கள் ஓடு­கி­றோம்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் நடந்­தது.

நேர­டி­யாக பல­ரும் கலந்­து­கொண்ட அந்த நிகழ்ச்சி ஒரு­பு­றம் இருக்க, மெய்­நி­கர் வாய்ப்பு ஒன்­றும் இருந்­தது. அந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்கொண்டு மக்­கள் தங்­கள் சொந்த வச­திக்­கேற்ப இந்த மாதம் முழு­வ­தும் ஓட்­டத்­தில் கலந்­து­கொண்டு நிறைவு செய்­ய­லாம்.

நேற்­றைய நேர­டி­யான ஓட்ட நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­வர்­கள் 6 கி.மீ. அல்­லது 10 கி.மீ. பிரி­வு­களில் நடக்­க­லாம் அல்­லது ஓட­லாம் என வரை­ய­றுக்­கப்­பட்டது.

கொவிட்-19 கார­ண­மாக 3,000 பேர்­தான் கலந்­து­கொள்­ள­லாம் என்று வரம்பு விதிக்­கப்­பட்­டது. உள்­து­றைக் குழு நிறு­வன பங்­கா­ளி­கள், தொண்­டூ­ழி­யர்­கள், பொது­மக்­கள் பல­ரும் ஓட்­டத்­தில் கலந்து­கொண்­ட­னர்.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் சாங்கி சிறைச்­சாலை வளா­கத்­தில் கொடி­ய­சைத்து ஓட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்.

மெய்­நி­கர் நிகழ்ச்சி இம்­மா­தம் 1ஆம் தேதி தொடங்­கி­யது. 30ஆம் தேதி வரை நடக்­கிறது. அதில் ஏற்­கெ­னவே 2,700 பேர் கலந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

அவர்­கள் தங்­கள் விருப்­பத்­திற்­கேற்ப எவ்­வ­ளவு தூரம் வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம். நீர்­நி­லை­களில் செல்­ல­லாம், சைக்­கிள் ஓட்­ட­லாம். நேற்­றைய மஞ்­சள் நாடா ஓட்­டத்­தின் மூலம் பொது­மக்­களும் நிறு­வ­னங்­களும் மஞ்­சள் நாடா நிதிக்கு $150,000 திரட்­டி­னர்.

"இப்­போது பல வகை ஓட்­டங்­கள் சேர்க்­கப்­பட்டு இருக்­கின்­றன.

"ஆகை­யால், ஒவ்­வொ­ரு­வ­ரும் அவற்­றில் கலந்­து­கொண்டு முன்னாள் குற்­ற­வா­ளி­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் ஆத­ரவு வழங்க முன்­வ­ரு­வார்­கள் என்று நாங்­கள் நம்­பு­கிறோம்," எனக் கூறி­னார், மஞ்­சள் நாடா ஓட்­டம் 2022 குழு­வின் துணைத் தலை­வ­ரும் சாங்கி சிறைச்­சாலை வளா­க போதைப்பொருள் மறு­வாழ்வு நிலைய சூப்­ரின்­டென் டண்ட்டு­மான கோக் வெங் சியூ.