அபே இறுதிச்சடங்கில் பிரதமர் கலந்துகொள்வார்

அபே இறுதிச்சடங்கில் பிரதமர் கலந்துகொள்வார்

1 mins read
3d54f117-a9ef-45f5-9825-7a1a874d67d5
-

ஜப்­பா­னின் முன்­னாள் பிர­த­மர் சின்ஷோ அபே­வின் இறு­திச் சடங்கு, நாளை செவ்­வாய்க்­கிழமை தோக்­கி­யோ­வில் நடக்­கிறது.

பிர­த­மர் லீ சியன் லூங் அந்த இறுதிச்சடங்­கில் கலந்­து­கொள்­வார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிர­த­ம­ரு­டன் அவ­ரின் துணைவி­யா­ரும் வெளி­யு­றவு அமைச்­சின் அதி­கா­ரி­களும் செல்­வார்­கள் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் அறி­வித்­தது.

துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் இன்­றும் நாளை­யும் தற்காலிக பிர­த­ம­ராக செயல்­ப­டு­வார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜப்­பா­னில் ஆக அதிக காலம் பிர­த­ம­ராக பதவி வகித்தவரான அபே, கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி நடந்த தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்.