சிறுவயது முதலே கலைத்துறையில் நாட்டம் கொண்டவர் நூர் ஹசினா, 26. தந்தையின் குறைந்த வருமானத்தினால் பல நிதி நெருக்கடிகளைச் சந்தித்தார்.
படிக்கும் காலத்தில் சிண்டாவின் உதவித்தொகை இவருக்கும் இவருடைய சகோதரிகளுக்கும் பெரிதும் உதவியது. உயர்நிலைப்பள்ளிக்குப் பின் அவர் கலைத்துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பியபோது பெற்றோர் துணை நின்றனர். சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் புத்தாக்க எழுத்துத் துறையில் மூன்றாண்டு பட்டயக்கல்வி படித்த இவர், அப் படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்த மிகவும் சிரமப்பட்டார்.
வங்கியில் கல்விக் கடன் பெற்றதுடன் பகுதிநேர நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பணி
புரிந்தார். இவரது தாயாரும் இவரின் கல்லூரிக் கட்டணத்திற்காக பகுதிநேர வேலைக்குச் சென்றார். படிப்பையும் பகுதிநேர வேலையையும் சமாளிப்பது கடினமாக இருந்ததாகக் கூறினார் ஹசினா. கலைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு, சிரமமான அந்த காலகட்டத்தைக் கடந்துவர உதவியதாகக் கூறினார்.
பட்டயக்கல்விக்குப் பின் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்பதில் தெளிவில்லாமல் இருந்த போது மூன்றாண்டு இடைவெளி விட முடிவெடுத்தார். தனியார் நிறுவனம் ஒன்றில் விளம்பர மேலாளராக இணைந்தார். வாழ்க்கைப் பயணத்தில் அவ்வப்போது குழப்பம் ஏற்படும்போது அவ
சரப்படாமல் இதுபோன்ற இடைவெளி விடுவது சரியான பாதைக்குச் இட்டுச்செல்லும் என்பதை தான் உணர்ந்ததாகக் கூறினார் அவர். அண்மையில் லசால் கலைக் கல்லூரியில் கலைத்
துறையில் இளங்கலைப் பட்டத்துடன் உன்னதத் தேர்ச்சி பெற்றார். இளங்கலைப் படிப்பின்
போதும் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக பகுதிநேர வேலை செய்தார். கலைத்துறையில் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க எத்தகு சவால்களையும் சந்திக்கத் தயார் என்கிறார் இவர்.